ஜப்பானிலுள்ள தீவொன்றில் மனிதர்களைவிட அதிக எண்ணிக்கையில் பூனைகள் காணப்படுகின்றன. ஓஷிமா எனும் இத்தீவு ஜப்பானின் எஹிமே மாகாணத்திலிருந்து 30 நிமிட படகுப் பிரயாணத் தூரத்தில் உள்ளது.
1945 ஆம் ஆண்டு சுமார் 900 பேர் அங்கு வசித்தனர்.
பெரும்பாலானோர் தொழில்தேடி நகரங்களுக்குச் சென்றுவிட வயோதிபர்கள் 22 பேர் மாத்திரம் அத்தீவில் எஞ்சியுள்ளனர். ஆனால் அங்குள்ள பூனைகளின் எண்ணிக்கை 120 ஆகும்.
மீனவர்களின் படகுகளை சேதமாக்கும் எலிகளின் தொல்லையிலிருந்து
தப்புவதற்காக அத்தீவுக்கு பூனை கள் முதலில் கொண்டுவரப்பட்டன.
ஆனால் கடந்த 50 வருடங்களில் மனிதர்களின் எண்ணிக்கை குறைந்து செல்ல பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
இதனால் தற்போது இத்தீவில் ஒரு நபருக்கு 6 பூனைகள் விகிதத்தில் காணப்படுகின்றன.


0 Comments