Subscribe Us

header ads

இரு முஸ்லீம் பெண்கள் மீது அங்க சேட்டை செய்த இளைஞர்களுக்கு வலை வீச்சு.

f.sihan


யாழ் ஐந்து சந்திப்பகுதியில் இரு முஸ்லீம் பெண்கள் மீது அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நேற்று காலை தனியார் வகுப்பிற்கு செல்வதற்காக துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த உயர்தரம் படிக்கின்ற இப்பெண்களை பின் தொடர்ந்த இளைஞர் குழு ஆள் அரவமற்ற பகுதியை பார்த்து அங்க சேட்டை செய்துள்ளது.

உடனடியாக குறித்த பெண்கள் கூச்சலிடவே அவ்விடத்தில் இருந்து இளைஞர்கள் தப்பி சென்றனர்.தற்போது உயர்தரம் கற்றபதற்காக வெளிமாவட்டங்களான திருகோணமலை ,மட்டக்களப்பு,அம்பாறை ,மன்னார் ,புத்தளம்,குருநாகல் பகுதயில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் தனியார் கல்வி நிலையங்களுக்கு தினமும் செல்கின்றனர்.

இவர்கள் எவரது பாதுகாப்பு இன்றியும் தன்னந்தனியாக அதிகாலை  ,இரவு நேர தனியார் வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில் தான் மேற்படி சம்பவமும் நடைபெற்றுள்ளது.

எனவே வட பகுதிகளிற்கு தங்கள் பெண்பிள்ளைகளை உயர்கல்விகளிற்கு அனுப்பியுள்ள பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

Post a Comment

0 Comments