Subscribe Us

ஏமன் மசூதி மீது தீவிரவாதிகள் தாக்குதல், 55 பேர் பலி


ஏமன் நாட்டின் தலைநகரான சனாவின் மையப்பகுதியில் உள்ள மசூதி மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் பலியாகினர். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏமன் தலைநகர் சனாவின் மையப்பகுதியில் உள்ள மசூதியில் திரளான மக்கள் பிரார்த்தனைக்காக ஒன்று கூடினர். அப்போது அல்-பத்ர் மற்றும் அல்-ஹசாஹூஷ் என்ற இரண்டு மசூதிகளின் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 55 பேர் உயிரிழந்ததகவும் பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments