Subscribe Us

header ads

தேர்தல் முறை மாற்றம் 22 இல் இறுதி முடிவு


விகி­தா­சாரத் தேர்தல் முறை­மையை மாற்­று­வது தொடர்­பி­லான இறுதித் தீர்­மானம் எடுக்கும் விஷேட கட்சித் தலை­வர்கள் கூட்டம் எதிர்­வரும் 22ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது அனைத்து கட்­சி­களும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்வு கிட்டும் என ஐ.தே.க ஊடக பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.
மேலும் 100 நாள் வேலைத்­திட்­டத்­தினை முன்­னெ­டுக்­கும்­போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் நிகழ்ச்சி நிரலை செயற்­ப­டுத்த நாம் தயா­ரில்லை. அத்­தோடு தேர்தல் முறை­மையில் மாற்றம் ஏற்­ப­டுத்த வேண்டும் என்­பதே ஐ.தே.க வின் நிலைப்­பா­டாகும். எனினும் பெரும்­பான்மை இல்­லாத பாரா­ளு­மன்­றத்­துடன் பய­ணிக்க முடி­யாது. இதனால் பாரிய சிக்­கல்கள் உள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
ஐ.தே.க தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்த சட்டம் விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இத­னூ­டாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியின் வரம்பு மீறிய அதி­கா­ரங்கள் நீக்­கப்­படும்.இதனை பாரா­ளு­மன்றில் சமர்­பித்து நிறை­வேற்­றுவோம்.
எனினும், தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் பெரும் சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது. விகி­தா­சார தேர்தல் முறை­மையை மாற்றி அமைப்­பதே ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் நிலைப்­பா­டாகும்.இதற்கு மாற்­றீ­டாக தொகு­தி­வா­ரியும் விகி­தா­சார முறை­மையும் கலந்த ஒரு தேர்தல் முறை­மை­யையே ஏற்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. இதற்கு ஐ.தே.க ஒரு­போதும் எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தாது.
எனினும் தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரி­யவின் ஆலோ­ச­னையின் பிர­காரம் எல்லை நிர்­ணயம் தொடர்­பி­லான ஆய்­விற்கு மாத்­திரம் மூன்று மாத­காலம் தேவைப்­படும் என்­பதே சிக்­க­லாக உள்­ளது.
பெரும்­பான்மை பலம் இல்­லாத பாரா­ளு­மன்­றமே தற்­போது உள்­ளது. இந்த பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை கட்­ட­மைக்­கப்­ப­ட­வேண்டும்.இது இவ்­வா­றிக்­கையில் மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளித்­த­மைக்கு அமை­வாக 100 நாள் வேலைத்­திட்டம் அவ­ச­ர­மாக நிறை­வேற்ற வேண்­டி­யுள்­ளது.பல்­வேறு வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றி உள்ளோம். தற்­போது தகவல் அறியும் சட்ட மூலத்­தினை சமர்­பிக்­க­வேண்­டி­யுள்­ளது.
அத்­தோடு மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளித்­த­மைக்கு அமை­வாக பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­ட­வேண்டும்.எவ்­வா­றா­யினும் இது தொடர்­பி­லான இறுதி தீர்­மானம் எடுக்கும் முக்­கிய கட்சி தலை­வர்கள் கூட்டம் எதிர்­வரும் 22 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை கூட­வுள்­ளது. இதன்­போது இணக்கம் இனக்­கப்­பாட்­டிற்கு வரமுடியும் என்றார்.

Post a Comment

0 Comments