கர்ப்பிணிப் பெண்களுக்கான கொடுப்பனவு எதிர்வரும் 21ம் திகதி முதல் வழங்கப்படும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோசினி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி ஒரு மாதத்திற்கு 2000 எனும் அடிப்படையில் 10 மாதங்களுக்கு 20,000 ரூபா வழங்கப்படவுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளரின் ஒப்புதலுக்கு அமைய பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொலன்னறுவையில் எதிர்வரும் 21ம் திகதி இதன் ஆரம்ப வைபவம் இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.


0 Comments