Subscribe Us

header ads

மைத்திரி இல்லாவிட்டால் மஹிந்தவே பிரதமர்


பொது தேர்தலில் சுதந்திர கட்சியின் வெற்றிக்காக ஜனாதிபதி பிரச்சாரம் செய்வது தொடர்பில் அறிவிக்கப்படாவிட்டால் மஹிந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன பொது தேர்தலில் நடுநிலை வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனும் எண்ணப்பாடும் வளர்ந்து வருகின்றது.

இந்நிலையில் தேர்தல் நிலைப்பாடு குறித்தும் அது தொடர்பில் தமது பங்களிப்பு குறித்தும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சிக்கு பாதகம் ஏற்படும் வகையிலான முடிவை எடுக்கமாட்டார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments