Subscribe Us

header ads

சுதந்திரக் கட்சியின் திருத்தங்களை மேற்கொள்ளும் அதிகாரம் சந்திரிக்காவிடம்


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசனை பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த கட்சியின் மத்திய குழு இந்த நியமனத்தை வழங்கியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்யும் அதிகாரம் இந்த ஆலோசனை பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை பேரவையின் தலைவர் பதவிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர்களான டி.எம். ஜயரத்ன, ரட்ணசிறி விக்ரமநாயக்க ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும் இன்று கூடிய சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு மற்றும் அகில இலங்கை செயற்குழு என்பன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை தெரிவு செய்ய தீர்மானித்தாக கட்சியின் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments