பைஷல் இஸ்மாயில் –
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ .எம்.ஜெமீலுக்கு எதிராக விதிக் கப்பட்டுள்ள தடை நீக்கப்படவுள் ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூ ப் ஹக்கீம் இன்று (08) ஆம் திகதி தாருஸ்ஸலாமில் நடைபெறும் ஊடகவி யலாளர் மாநாட்டில் அறிவித்தார்
இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஏ.எம்.ஜெமீல் கலந்து கொண்டு தான் நடந்து கொண்ட முறை தவறானது என ஏற்றுக்கொண்டு மன்னி ப்புக் கோரினார்.
கிழக்கு முதலமைச்சராக ஏ.எம்.ஜெ மீல் நியமிக்கப்படாததை அடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் த லைவர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந் தமருதில் ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தினை அடுத்து கட்சியின் அனைத்து பதவிகளிலுமி ருந்து ஜெமீல் கட்சித் தலைவர் ர வூப் ஹக்கீமினால் இடைநிறுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் கா ங்கிரஸ் . தலைவருக்கு எதிரான ஆர ்ப்பாட்டத்துடன் தனக்கு தொடர்பி ல்லை என்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ .எம்.ஜெமீல் தெரிவித்தார்.
இந்த நிலையில் அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட அனைத்து தடைகளும் இன்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பி டத்தக்கது.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சின் செயலாளரும் இராஜங்க அமைச்சருமான எம்.ரீ.அஸன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், சட்டத்தரணிகளான ஜே.லாஹிர், ஆரீப் சம்சுடின், முஹம்மட் அன்வர், எம்.ஐ.எம்.மன்சூர், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் உள்ளிட்ட பல கட்சி உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.




0 Comments