Subscribe Us

header ads

ஸ்கைப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை


ஸ்கைப் தொழில்நுட்ப தொடர்பு சாதனத்தில் பெண்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் போது புத்திசாலித்தனமாக செயற்பட்டால், இணையத்தளங்கள் வழியாக நடக்கும் குற்றங்களை குறைக்க முடியும் என சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான பொலிஸ் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் லங்கா ராஜினி தெரிவித்துள்ளார்.

எந்த விதமான அச்சுறுத்தலோ, அழுத்தங்களுக்கோ அடிபணிந்து ஸ்கைப் போன்ற ஊடகங்கள் வழியான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாகாமல் இருப்பதில் வயது வந்த பெண்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

18 வயதுக்கும் குறைவான பிள்ளைகள் இப்படியான இணைய வழி ஊடகங்களை பயன்படுத்துவது குறித்து வயது வந்தோர் தமது கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் ராஜினி கூறியுள்ளார்.

இலங்கை தற்போது தொழில்நுட்ப ரீதியில் முன்னேறி வருகிறது. இதன் போது பெண்களும் சிறுப்பிள்ளைகளும் தமது உளப்பாங்கை முன்னேற்றக்கொள்ள வேண்டியது அவசியம்.

பெண்கள் தமது மனப்போக்கில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டால், ஸ்கைப் போன்ற இணைய வழி ஊடகங்கள் மூலம் ஏற்படும் குற்றச் செயல்களை குறைக்க முடியும் எனவும் லங்கா ராஜினி மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments