Subscribe Us

header ads

ஏன் அவர்கள் கள்ளத்தோனிகளா?


புதிதாக நியமனம் பெற்ற மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துக்கு வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு உட்பட அனைத்து இலங்கையையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, சிறப்பான அரசியல் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறிய ஒரு சந்தர்ப்பமாகும். 1978 அரசியலமைப்பு நிறைவேற்றிக் கொள்ளப்பட்டதன் பின் கடந்த 36 வருடங்களுக்குள் ஜனாதிபதியொருவரையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சி, ஆட்சியை மாற்றிக் கொள்வதற்கு இலங்கை வாக்காளர்களுக்கு கிடைத்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். 1977க்குப் பின் ஆட்சியை மாற்றிக் கொள்வதற்கு 17 வருடங்கள் கடந்துள்ளன. அது 1994ல் ஆகும். அதனையடுத்து இம்முறை ஆட்சி அதிகாரம் மாற்றப்பட்டிருப்பது 20 வருடங்களின் பின்னராகும். ஆறு வருடங்களுக்கொருமுறை ஜனாதிபதியொருவரை நியமித்துக் கொள்வதற்கான வாய்ப்பு இலங்கை வாக்காளர்களுக்கு இருப்பதை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இந்த நடைமுறையில் உள்ள முறைமையில் அதனை உண்மையானதாக்கிக் கொள்ளக்கூடிய இயலுமை இல்லையென்பதை வரலாறு எமக்கு காண்பித்துள்ளது. ஒரே ஆட்சியாளர் அல்லது கட்சி நீண்ட காலத்திற்கு அதிகாரத்திலிருப்பது, ஜனநாயகத்துக்கு எந்த வகையிலும் ஆரோக்கியமானதல்ல என்பதனை புதிதாக குறிப்பிடுவதற்கில்லை. விருத்தியடைந்த ஜனநாயக நாடுகளில் ஒருவருக்கு அதிகாரத்தில் இருக்கக்கூடிய வாய்ப்புகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டிருப்பது அதனாலாகும்.
எனினும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவசியப்பட்டது ஜனநாயகமன்றி பரம்பரை பரம்பரையாக செல்லக்கூடிய ராஜகுடும்ப எதிர்காலமாகும். ஜனவரி 8ம் திகதி இந்த நாட்டு மக்கள் அந்த அபிலாஷையை தவிடுபொடியாக்கினர். தற்போது ராஜபக்ஷாக்களும் அவர்களால் வாழ்ந்த அவர்களது அடிவருடிகளும் பின் நோக்கித் திரும்பி தமது நலன்களை தம்மிடமிருந்து அபகரித்துக் கொண்ட முறையை தமது பாணியில் பொது மக்களுக்கு கூற முற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது எவ்வாறெனின் அவர்களது கருத்துப்படி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் வடக்கு, கிழக்கு சிறுபான்மையினரின் எதிர்பார்ப்புக்களோடு மாத்திரம் உருவாக்கப்பட்ட, பௌத்த சிங்களவர்களது அபிலாஷைகளை உதைத்துத் தள்ளிய சந்தர்ப்பமொன்றாகும். அது பிரிவினைவாத மற்றும் புலம் பெயர்ந்தோரது சதியொன்றின் பின்விழைவொன்றாகும். மீண்டுமொரு யுத்தத்துக்கு வழிவகுப்பதாகும். இந்த விடயங்களை உறுதிப்படுத்துவதற்கு தற்போதிருந்தே இவர்கள் கொடூர தகவல்களை வெளியிட ஆரம்பித்து விட்டார்கள். இதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைதியின்மை நிலவி வருவதாகவும் வடக்கில் இராணுவ முகாம்களுக்கு முன்னால் புலிக்கொடி ஏற்றப்பட்டுள்ளதாகவும் பொய் மூட்டையை கட்டவிழ்த்து வருகிறார்கள். இவை அனைத்தின் மூலமாகவும் இவர்கள் மேற்கொள்ள முயல்வது சிங்கள, பௌத்தர்களை உசுப்பேற்றி அதன் மூலம் அதிகாரத்துக்கு வர முடியுமென அவர்களிடையே காணப்படும் நம்பிக்கையினாலாகும். தெற்கு சிங்கள வாக்குகளால் மாத்திரம் மத்திய அரசாங்கத்தை உருவாக்கிக் கொள்ளக்கூடிய தேசியவாத சிந்தனை இந்த ஜனாதிபதித் தேர்தலின் மூலம் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. இது பல்லினங்கள், பல் மதங்கள் கொண்ட நாடு மற்றும் சமூக அடிப்படையில் நாம் மேற்கொள்ள வேண்டியதொன்றன்றி கர்வமடையக் கூடியதோ அல்லது கவலையடையக் கூடியதொன்றோ அல்ல. அதேபோல் இந்த நிலைமையை ஒரு சில காரணங்களுக்காக மூடி மறைக்கக் கூடியதொன்றல்ல. ஆம். மைத்திரிபால சிறிசேனவுக்காக வடக்கு, கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் ஒரே அணியாக வாக்களித்தார்கள் தான். அவ்வாறிடம்பெற்றிருப்பதை தவறாகக் கருதுகின்ற மஹிந்த ராஜபக்ஷ உட்பட இனவாதிகள் கூறுவது வடக்கு, கிழக்கு மக்களை கள்ளத்தோனிகளாக கருத வேண்டுமென்பதா?
1978க்குப் பின் தெற்கு சிங்கள வாக்குகளால் மாத்திரம் மத்திய அரசாங்கத்தை உருவாக்கிக் கொண்ட முதல் சந்தர்ப்பம் 2005ல் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதித் தேர்தலாகும். இதனை வெற்றி மிக்கதாக்கிக் கொண்டது மஹிந்த ராஜபக்ஷவினால் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு வழங்கப்பட்ட பாரிய இலஞ்சமொன்றின் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களை வாக்களிக்காமல் தடுத்துக் கொண்டதனாலாகும். அந்த அரசியல் இலஞ்சத்திற்கான கொடுப்பனவை பிரபாகரன் 2009 மே மாதம் 9ம் திகதி செலுத்தியிருந்தார். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பேராசையில் ஆழ்ந்திருந்த ராஜபக்ஷவினர் பிரபாகரனின் நட்டஈட்டினால் மாத்திரம் திருப்தி கொள்ளவில்லை. இந்த நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் ஆகிய அனைத்து மக்களிடமிருந்தும் அது தொடர்பிலான நட்டஈடொன்றை அவர்கள் வேண்டி நின்றார்கள். கடந்த 8ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் தீர்ப்பு, அந்த நட்டஈட்டை செலுத்தாமலிருப்பதற்கு மேற்கொண்ட பொது மக்களது வாக்களிப்பு முடிவு வெளியிடப்பட்டதிலிருந்து பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் தேர்தல் முடிவுகள் வரைபுகளாக்கப்பட்டது மேலே குறிப்பிடப்பட்ட பொதுவான காரணியை மூடி மறைக்கும் வகையிலாகும். மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்ற மாவட்டங்கள் நீல நிறத்திலும் மைத்திரிபால வெற்றிபெற்ற மாவட்டங்கள் சிவப்பு நிறத்திலும் வர்ணமிடப்பட்டிருந்தன. வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்போது இவ்வாறு வர்ண வரைபடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு மாவட்டம் அல்லது மாகாணத்தில் ஏதேனுமொரு கட்சி வெற்றி பெற்றுள்ளதை அடையாளப்படுத்துவதற்கு அந்தக் கட்சியை காட்டும் வர்ணம் பயன்படுத்தப்படுவது பிரச்சினையல்ல. எனினும் அந்த வர்ணத்தினால் அவ்வாறான நாடொன்றில் அடையாளப்படுத்துவது பெரும்பாலும் ஒரு மாகாணம் அல்லது கட்சி மாத்திரம் என்ற வகையிலாகும். எனினும் பல்வேறு இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடொன்றில் விசேடமாக அவ்வாறான பல்வேறுபட்ட இனங்களிடையே சந்தேகம் நிலவுகின்ற இலங்கை போன்ற நாடொன்றில் ஏதேனுமொரு மாகாணம் அல்லது மாவட்டத்தை ஒன்றாகக் கருதி விசேட வர்ணமொன்றின் மூலம் அடையாளப்படுத்துவதால் இடம்பெறுவது பொதுவான வாக்களிப்பு முடிவுகள் வெளியிடப்படுவதை பார்க்கிலும் வேறுபட்ட கருத்து வெளிப்படக்கூடிய, இனவாத, மதவாத, கோத்திரவாத கருத்துக்களை வெளிச்சம் போட்டு காட்டக்கூடிய தாக்கமொன்றினை உருவாக்குவதாகும்.
இது தவிர்க்கப்பட வேண்டியதொன்றாகும். அது தேர்தல் முடிவை மாற்றுவதன்றி பெறுபேற்று அறிவிப்பு முறைமையை மாற்றுவதாகும். உதாரணமாக இவ்வாறான வெளிப்படுத்தலின் மூலம் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்ற அனைத்து மாவட்டங்களையும் நீல நிறத்தில் அடையாளமிடும்போது அந்த மாவட்டங்களில் மைத்திரிபால சிறிசேன பெற்றுக் கொண்ட வாக்குகளின் அளவு குறிப்பிடப்படுவதில்லை. அதேபோல் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற அனைத்து மாவட்டங்களும் சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகின்ற போது அந்த மாவட்டங்களில் மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக் கொண்ட வாக்குகளின் அளவை நீல நிறத்தில் அடையாளப்படுத்தவில்லை. ராஜபக்ஷவினர் தற்போது இனவாத சிந்தனையை விதைப்பதற்கு பயன்படுத்துவது ஒரு தலைப்பட்ச வரைபடத்தை ஆகும். இவ்வரைபடங்களில் தென் மாகாணத்தில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்ற பத்து மாவட்டங்களிலும் அவருக்கு கிடைத்த 3100000 வாக்குகளும் நீல நிறத்தில் அடையாளப்படுத்துகின்ற அதேவேளை அதே மாவட்டங்களில் மைத்திரிபால பெற்றுக்கொண்ட 2500000 வாக்குகளும் சிவப்பு நிறத்தில் குறித்துக்காட்டப்படவில்லை. அதேபோன்று, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற சிறுபான்மையினர் வாழும் பிரதேசங்களில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான சிறுபான்மை மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்திருப்பதை அங்கு குறிப்பிட்டிருக்கவில்லை. எனவே, தற்போது நாம் இது தொடர்பிலான மிகவும் யதார்த்தபூர்வமான வரைபொன்றினை தயாரித்துள்ளோம். அந்த வரைபடத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அந்தந்த நிறங்களில குறிப்பிடப்பட்டிருப்பதோடு, அனைத்து மாவட்டங்களிலும் ராஜபக்ஷவின் நீல நிறத்தைப் போன்று மைத்திரிபாலவின் சிவப்பு நிறமும் சரிசமமாக மிளிர்வதை அதனூடாக குறிப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
எவ்வாறெனினும் இந்த விடயத்தை குறிப்பிடுவதனால் கருதுவது, மஹிந்த ராஜபக்ஷ இன்று முன் வைக்கின்ற வரைபில் ஒரு தலைப்பட்சமும் சிங்கள பௌத்த மக்களை உசுப்பேற்றுவதற்கு அவர்களிடையே காணப்படும் நோக்கத்தையும் வெளிக்கொணர்வதேயன்றி, தெற்கு சிங்களவர்களை விடவும் வடக்கு, கிழக்கில் வாழும் சிறுபான்மையினர் மஹிந்த ராஜபக்ஷவை புறக்கணிக்கவில்லை எனக் கூறுவதல்ல. குறிப்பிட்டுக் கூறப்படவேண்டியது சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மை மதத்தவர்கள் அவ்வாறு நாடொன்றின் தீர்க்கமான ஜனநாயக காரணியாகியுள்ளமை அந்த நாட்டின் ஜனநாயகத்துக்கு கிடைத்த உந்து சக்தியே அன்றி பாதகமொன்றல்ல என்பதாகும்.
தமிழ் புலம் பெயர்ந்தோரில் ஒரு சிலரும் எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவாளர்களும் 2005ம் ஆண்டைப் போன்று இந்த தேர்தலையும் பகிஷ்கரிக்குமாறு தமிழ் மக்களிடம் கோரியிருந்தனர். அந்த கோரிக்கையை கீழ் மட்டத்திலிருந்து அமுல்படுத்துவதற்கு இம்முறை எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பு இருக்கவில்லை. எனவே, தமிழ் மக்கள் அவ்வாறான ஜனநாயக விரோத வேண்டுகோளை கவனத்திலெடுக்காது இந்த நாட்டின் ஜனநாயக நீரோட்டத்தில் தாமும் நேரடி பங்காளர்களாக ஆக வேண்டுமென தீர்மானித்தனர். இவர்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தியது மஹிந்த ராஜபக்ஷ எனும் சிங்களவர் ஒருவருக்கு, பௌத்தரொருவருக்கு எதிராக மைத்திரிபால சிறிசேன எனும் தமிழனொருவருக்கு / முஸ்லிம் ஒருவருக்கல்ல மஹிந்த ராஜபக்ஷவை போன்ற சிங்கள பௌத்தரொருவருமான மைத்திரிபால சிறிசேன என்ற ஒருவருக்காகும். அவ்வாறு வாக்களிப்பதற்கு தமக்கு தனியான நாடு தேவையெனவோ, ஆகக் குறைந்தது தமது மாகாணங்களில் இன்று அனுபவிக்கின்ற அன்றாட சிரமங்களை அகற்றுமாறோ மைத்திரிபால சிறிசேனவிடம் எந்தவொரு நிபந்தனையையும் அவர்கள் முன்வைக்கவுமில்லை. அவர்களது வாக்குகள் நிபந்தனையற்ற முன் அனுமதியாகும். அந்த அனுமதியின் இயல்பு மற்றும் அதற்கு காரணமான பின்புலன்களை வேறு கட்டுரையொன்றில் குறிப்பிடவுள்ளேன்.
மஹிந்த ராஜபக்ஷவின் வாதமாக இருப்பது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்த செயற்பாட்டிலிருந்து விலகியிருந்தால் அல்லது இவர்கள் மைத்திரிபாலவுக்கு வாக்களிக்காமல் இருந்திருப்பார்களானால் தான் வெற்றி பெற்றிருப்பேன் என்பதாகும். அறிந்தோ, அறியாமலோ மஹிந்த ராஜபக்ஷ இதன்மூலம் கருதுவதென்ன? அது வேறெதுவும் அன்றி பிரிவினைவாதமாகும். தம்மால் பயன்படுத்தப்படும் வாக்குகள் ஐக்கிய இலங்கைக்குள் அசிங்கமான (துர்நடத்தை) வாக்குகளாக கருதுவார்களாயின் அந்த சிறுபான்மையினர் திருப்பி எம்மிடம் ஒரு விடயத்தை வேண்டி நிற்பார்கள். அது உங்களது இலங்கைக்குள் எமது வாக்குகள் அசிங்கமானதாக கருதுவீர்களாயின், அவமரியாதையானதாக கருதுவீர்களாயின் எங்களுக்கும் சுயமாக வாக்களிக்கக்கூடிய எங்களுக்கே உரிய நாடொன்றை தரவும் என்பதாகும். அப்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெற்கு வாக்குகளால் மாத்திரம் இந்த நாட்டின் தனித் தலைவராக சிலவேளை குறிப்பிட்ட காலமொன்றுக்கு பிரகாசிக்க முடியும். யுத்தத்தை வெற்றிகொண்டதன் பின் ஒன்றுபடுத்தியதாக கூறும் நாடொன்றின் எதிர்கால ஐக்கியத்தை பாதுகாக்க வேண்டியது அம்பாந்தோட்டையை கோலாகலமாக முன்னேற்றச் செய்வதோடு, யாழ்ப்பாணத்தை புறக்கணித்து செயற்படுவதனாலா?
-ராவய-

Post a Comment

0 Comments