Subscribe Us

header ads

எந்த புத்தர்? யாருடைய பௌத்த மதம்?


துட்டகைமுனு மன்னன் தனது முதலாவது போராட்டத்தை அவரது குடும்பத்தினுள்ளேயே ஆரம்பித்தார். மகாவம்சத்தின்படி தனது இளைய சகோதரரான திஸ்ஸவுக்கு எதிராக போராடினார். அவர் தனது அரச கிரீடத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக சிறிய மன்னர்களுக்கெதிராகவும் இறுதியாக எல்லாள அரசனுக்கெதிராகவும் யுத்தம் மேற்கொண்டார். மகா வம்சத்தின்படி இச்சிவில் போராட்டங்களின் போது ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இறந்தவர்களை சிங்கள பௌத்தர்கள் எனக் கருதுவது நியாயமானது. எனினும் தமது சகோதர மதத்தவர்கள் இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்படுவது பற்றி மகாவம்சத்தில் எந்தவொரு வசனத்திலும் குறிப்பிடவில்லை. எல்லாளனுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற படுகொலைகளினால் அவரது மனம் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்ததாக மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக தேரர்கள் மனவேதனை கொள்ளவோ அல்லது அச்சமடையவோ வேண்டியதில்லையென துட்டகைமுனு அரசன் தேற்றியுள்ளார். இச் செயல்பாட்டினால் தாங்கள் சுவர்க்கலோகம் செல்லும் பயணத்திற்கு எந்தத் தடையும் இடம்பெறப்போவதில்லை. உங்களால் கொல்லப்பட்டிருப்பது ஒன்றரை மனிதர்கள் மாத்திரமே. ஒருவர் மும்மணிகளின் ஆசிர்வாதம் பெற்றுச் சென்றவராவதோடு மற்றையவர் பஞ்சசீலம் மாத்திரம் மேற்கொண்டவர். ஏனையவர்கள் மதங்களை வழிபடாத மூட நம்பிக்கை கொண்டவர்களாவதோடு, இவர்கள் மிருக இனத்துக்கு உட்பட்டவர்கள். இவர் அதிகாரத்திற்கு வருவதற்காக மேற்கொண்ட மனிதக் கொலைகளை உள்வாங்கினால் இச் சான்று பிழைத்துப் போகும். மகாவம்சத்தில் யுத்தமொன்றின்போது இடம்பெற்ற மனக்கவலை பற்றிக் கருதுவது மூட நம்பிக்கைக் கொண்ட மிருகங்களை விட மோசமான அவர்களை கொல்வதால் எந்தவொரு பாவமும் இல்லை. மதத்துக்காக போராடுவது சுவர்க்கலோகம் செல்வதற்கு காரணமாகிறது என்ற புதிய மாயையை உருவாக்குவதற்காகும்.
இக்கருத்துக்கு பலம் சேர்க்கவும் சட்ட அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்கவும் மகாநாம தேரர் தூதர்கள் மீது இப்பொறுப்பை சுமத்தினார்கள். இவ்வாறு மேற்கொண்டது புத்தபெருமான் இது தொடர்பாக கொண்டுள்ள கருத்து மிகத் தெளிவானது என்றதனாலாகும். உயிரொன்றை கொல்வது மனிதனாக இருந்தாலென்ன? மிருகமாக இருந்தாலென்ன பாவச் செயலாகும். இதிலிருந்து விடுதலை கிடையாது.
கூட்டிணைத்த மதகுருமார் பிரிவில் காமிணி தொகுதியில் வரும் ஜீவமான சூத்திரத்தில் கிராமப்புர முக்கியஸ்தரொருவரான மிகப்பெரிய ஜீவமான புத்தபெருமானிடம் யுத்தமொன்றின்போது போராடி மரணித்தவர்கள் சுவனலோகம் செல்வார்களா என கேட்டார். புத்த பெருமான் மூன்று முறை பதிலளிப்பதிலிருந்து விலகியதோடு, மீண்டும் வற்புறுத்தப்பட்டதன் பேரில் இவ்வாறு பதிலளித்தார். யுத்தமொன்றின்போது தாக்குவதற்கு எத்தனிக்கின்ற போது போராளியொருவர் இருப்பது இவர்களைக் கொல்ல வேண்டும், வெட்ட வேண்டும், அழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலாகும். அவ்வாறான நிலையில் அவர்களைத் தாக்கி அவர்களைக் கொலை செய்து விட்டால் அவர்கள் மீளவும் பிறப்பது நரகத்திலாகும். யுத்தமொன்றின்போது இறந்து விடுவோர்க்கு நேர்வது இதுவேயாகும். இதில் எவ்வித மாற்றங்களோ விசேடத்துவமோ இருக்க மாட்டாது பௌத்த மதத்தை பாதுகாப்பதற்காக இறப்பவர்கள் சுவனலோகம் செல்வரென புத்தபெருமான குறிப்பிட்டது கிடையாது.
இந்த மாற்ற முடியாத மனோபாவம் மகாநாம தேரருக்கோ அல்லது அப்போது இடம்பெற்று வந்த தாதுசேனன் மன்னனின் நிர்வாக முறையோடோ பொருந்துவதாக இல்லை. தாதுசேனன் மகாநாம தேரரின் அனுசரணையாளராவதோடு, மருமகனுமாவார். மாமனார் மருமகனை முன்னணிக்குக் கொண்டுவந்தது நாடு இக்கட்டான நிலையிலிருந்த காலகட்டத்திலாகும். இலங்கை 30 வருட காலமாக பாண்டியர்களது நிர்வாகத்திற்குட்பட்டிருந்தது. தாதுசேனன் அதிகாரத்துக்கு வந்தது இறுதிப் பாண்டிய மன்னனையும் துரத்திய நிலையிலாகும். யுத்தத்தின்போது கொலைகள் இடம்பெற்றன. சில சந்தர்ப்பங்களில் தாதுசேனனினால் பஞ்சசீலத்தின் முதலாவது கோட்பாடு பாரியளவில் மீறப்பட்டுள்ளது. அவரது இராணுவ சிப்பந்திகள் மரணத்துக்கப்பாலுள்ள வாழ்க்கையைப் பற்றி சிந்தித்திருக்கலாம். இவ்வாறான நிலையில் மாநாமதேரர் முன்னோக்கி வந்து பாவமற்ற யுத்தம் என்ற மனோபாவத்தை தோற்றுவித்து அரசனையும் இராணுவ சிப்பந்திகளையும் தைரியப்படுத்தியதாக இருக்கலாம் என கருதுவது நியாயமானது. இது அவர்களை தேற்றுவதற்காகும்.
இந்தக் கருத்தை பிரசாரப்படுத்துவதில் மகாநாம தேரர் வெற்றி கண்டுள்ளார். அவர் புத்த பெருமானின் போதனைகளை தலைகீழாக மாற்றி, முற்றுமுழுதமாக வேறுபட்ட பௌத்த மதமொன்றை உருவாக்கியதோடு, 15 வருட காலமாக இலங்கை அரசியலை உருவாக்குவதற்கும் காரணகர்த்தாவாக இருந்துள்ளார்.
மகாவம்ச பொறி
நேற்றிரவு
கனவில் கண்டேன்
பொலிசார்
புத்தருக்கு துப்பாக்கியால் சுட்டு கொல்
இரத்தம் பெருக அவரது மேனி
யாழ்ப்பாண நூலகம்
படிக்கட்டுகளில்
விழுந்திருந்தது
யாழ்ப்பாண நூலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பேராசிரியர் எம்.ஏ. நுஹுமான் எழுதிய அழகான கவிதை அவ்வாறே ஆரம்பித்தது. புத்தரை அவ்வாறு கொன்றுப்போட்டது ஏன் என்று அமைச்சர்கள் கேட்டபோது பொலிசார் கூறுவது,
கொல்லாது அவரை
எவ்வாறு ஈயொன்றுக்காவது
வதை மேற்கொள்ள முடியுமா?
உண்மைதான். ஆனால், உண்மையாகவே புத்தபெருமான் கொல்லப்பட்டது 6வது நூற்றாண்டிலாகும். மகாநாம தேரர் பௌத்த மதத்தை மீள எழுதியது மட்டுமன்றி, அதனை யுத்தவாத பௌத்த மதத்துக்கு பொருந்தக்கூடிய புதிய யுத்தவாத புத்தபெருமானார் ஒருவரையும் உருவாக்கினார். மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தபெருமான், சித்தார்த்த கௌதம புத்தரிலும் முற்றாக வேறுபட்டவர்.
திரிபீடகங்களில் சந்திக்கின்ற புத்தரைப் போன்றல்லாது மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் புத்தர் தந்திரமும் அதி மானிட பலத்தினால் எதிரிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருபவருமாவார். அவர் புத்த பெருமான் மேற்கொண்டது போன்று அனைத்து விலங்குகளுக்கும் கருணை காட்டுவதில்லை. மகாவம்ச புத்தருக்கு ஒரு கடப்பாடுள்ளது. எதிர்காலத்தில் அவரது தர்மம் பாதுகாக்கப்படக்கூடியதாக இலங்கையை பாதுகாப்பதே அவரது நோக்கமாகவுள்ளது. இந்த அரசியல் திட்டங்களின்போது கடவுளர்கள் அவர்களது சகாக்களாவார்கள். அநியாயமான தோல்விகளை அவராகவே ஏற்படுத்திக் கொள்கிறார். இலங்கையின் ஆதிவாசிகள் அவரது எதிரியாவர். மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் புத்தர் உண்மையான புத்தர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செய்யாதவற்றையே செய்வார். இலங்கை நோக்கி வந்த பேய்களுக்கு நற்போதனை புரிவதற்கு பதிலாக அவர்களை துரத்தியடித்தார்கள். திரிபீடகத்தினுள் புத்தர், பேய்களை எதிரிகளாக கருதவில்லை. பேய்க்கோளாறுகளின்போது புத்தர் பேயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது பொறுமை, நேர்மை, மற்றும் வாக்குறுதியின் ஊடாகவாகும். மற்றொரு பேயான சீலக்க பேய் முன் சென்று புத்தரை சந்திக்குமாறு மூன்று முறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகாவம்சம் புத்தர் மழை, சூறாவளி, இருளைக்காட்டி அவர்களை பீதி கொள்ளச் செய்துள்ளது. அவ்வாறு செய்து அவர்களை புனித பூமியிலிருந்து விரட்டியடிக்கவும் செய்துள்ளனர்.
நவீன இலங்கைக்குள் சிவில் சமாதானமொன்றை கொண்டு செல்ல முடியாமைக்கு காரணம், உரிமையாளர்கள், வெளியார்கள் என்ற எண்ணத்தினாலாகும். பௌத்தர்கள் தாம் இந்தத் தீவின் தனி உரிமையாளர்கள் எனவும் அன்னியர்கள் வெளியிலிருந்து வந்து குடியேறிய வந்தேறு குடிகள் எனவும் நினைக்கிறார்கள். அவர்களுக்கு நாட்டினுள் எந்தவித உரித்தும் இல்லை. இந்தக் கருத்தை வேறு மகாவம்ச நிலைப்பாட்டின் ஊடாக ஏற்படுத்தியுள்ளார்கள். மகாவம்சத்தின்படி புத்தர் தனது மரண சமயத்தில் எனது தர்மம் அழியாது இருப்பது இலங்கையில் என்பதால் அதனை கவனமாக பாதுகாக்குமாறு கடவுளிடம் வேண்டியுள்ளார். புத்தரின் கடைசி சில நாட்கள் மகாபரிநாம சூத்திரத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. என்றாலும் அதனுள் புத்தர் செய்த இவ்வாறான வேண்டுகோள் பற்றி எந்தவொரு குறிப்பும் இல்லை.
தனது தர்மம் சுத்தமாக பாதுகாக்கப்படுவது இந்தச் சிறிய தீவிற்குள் தான் என புத்தர் ஒருபோது கூறியது கிடையாது. அதனை பாதுகாக்குமாறு கடவுளிடம் ஒருபோதும் வேண்டியதில்லை. ஒப்படைத்தார் என்ற கதை மகாநாம ஏற்படுத்திய மற்றொரு கற்பனையாகும்.
ஜீவமான சூத்திரத்தில் புத்தரின் பதிலைக் கேட்ட ஜீவமானம் அழத்தொடங்கியது. அவர் அழுவது பொய்யான ஆசிரியர்களினூடாக நீண்ட காலமாக போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் பிற தெய்வங்கள் என அவர் ஏமாற்றியதால் என புத்தர் காண்பித்துக் கொடுத்தார்.
மகாநாம என்ற அரசியல் பிக்கு மகாவம்சத்தை எழுதி 15 நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் அவருடைய வாழ்க்கை நிலை மற்றும் துரவர மரபுரிமை ஊடாக நாம் ஏமாற்றப்பட்டு, வஞ்சனை செய்யப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ளோம்.
மகாவம்ச பௌத்தத்தில் கூறப்படுவது, இலங்கை பௌத்தர்களின் பரிசுத்த பூமி என்றும் பௌத்தர்களுக்கு பௌத்தர்கள் அல்லாதவர்களோடு இங்கு குடியிருக்க முடியாதிருப்பதனால் யுத்தம் செய்து அவர்களை விரட்டியடித்தல் ஒரு பாவச்செயல் அல்ல என்பதாகும். இந்த உண்மையை இங்கு வாழும் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை ஒற்றுமையை சீர்குலைத்து பொறுமையற்ற வதையை ஏற்படுத்தியுள்ளனர். எங்களது வரலாறு அரசியலும் பௌத்தமும் இணைந்தது என்பதை மகாநாம தேரர் மற்றும் அவரின் சீடர்களும் பிண்ணிய பொய்யிலிருந்து மீட்டெடுக்கும் வரை இலங்கை நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த முடியாமல் போகும்.
 
திசரணி குணசேகர

- See more at: http://tamil.ravaya.lk/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4/#sthash.LpGokCle.dpuf

Post a Comment

0 Comments