Subscribe Us

மத்தள விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக பாரியளவு கடன் வட்டி! அமைச்சர் அர்ஜூன


மத்தள விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றுக்கு பாரியளவு கடன் வட்டி செலுத்த நேரிட்டுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நிர்மானிக்கப்பட்ட மத்தள விமான நிலையம் மற்றும் மற்றம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியனவற்றுக்காக பாரியளவில் கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கடன்களுக்காக மிகக் கூடுதலான வட்டித் தொகையை செலுத்த நேரிட்டுள்ளது.

எவ்வாறெனினும் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதலாம் பகுதியின் இரண்டாம் கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால் அதனை தொடர்ந்தும் முன்னெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மத்தளை விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியன தொடர்வில் எவ்வாறான தீர்மானம் எடுப்பது என்பது குறித்து எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்படும்.

தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களை கருத்திற் கொண்டே தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments