Subscribe Us

header ads

இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் சின்னப்பாலமுனை சுப்பர் ஒக்கிட் விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கட் சுற்றுப்போட்டி (PHOTOS)

பி. முஹாஜிரீன்


இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் சின்னப்பாலமுனை சுப்பர் ஒக்கிட் விளையாட்டுக் கழகத்தின் சுப்பர் ஓக்கிட் பிரிமியர் லீக் 2015 மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வுகள் இன்று (04) நடைபெற்றன.

வருடாந்தம் சுப்பர் ஓக்கிட் கழக வீரர்களின் திறனை விருத்தி செய்வதற்காக நடத்தப்படும் இத்தொடருக்கமைய, சுப்பர் ஓக்கிட் டைகரஸ்;, லயன்ஸ், ஈகிளஸ்;, வொரியர்ஸ் ஆகிய 4 அணிகளுக்கிடையிலான இச்சுற்றுத் தொடரில் சுப்பர் ஓக்கிட் டைகரஸ்;, சுப்பர் ஓக்கிட் லயன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகின.

இவ் இறுதிநாள் நிகழ்வு சுப்பர் ஒக்கிட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பி. முஹாஜிரீன் தலைமையில் சுப்பர் ஓக்கிட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். தாஜூதீன் பிரதம அதிதிதயாகக் கலந்த கொண்டதுடன், இந்நிகழ்வில் சுப்பர் ஒக்கிட் விளையாட்டுக் கழகத்தின் உப தலைவர் எஸ்.எச். தம்ஜீத், முகாமையாளர் எஸ்.எச். முர்ஸித், கிரிக்கட் அணித்தலைவர் எம்.எச். நிஸார்தீன் உட்பட நிருவாகிகள் மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இறுதிப் போட்டியில் சுப்பர் ஓக்கிட் டைகரஸ் அணி வெற்றிபெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டன. இதில் போட்டித் தொடரின் சிறப்பாட்டக்காரராக சுப்பர் ஓக்கிட் டைகரஸ் அணித் தலைவர் எஸ்.எம். பர்ஹான் தெரிவானார். இதில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட அணி வீரர்களுக்கும் இரண்டாவதாக தெரிவான அணி வீரர்களுக்கும் கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.









Post a Comment

0 Comments