மகிந்தவுடன் நாட்டை வெற்றி பெற ஆயத்தம் என்ற தலைப்பின் கீழ் எதிர்வரும் 18 ஆம் திகதி நுகேகொடையில் இடம் பெறவுள்ள பேரணிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் எவ்வித சம்பந்தமும் இல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய நிர்வாக குழு கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பேரணியானது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிரிக்கும் சூழ்ச்சி மற்றும் வேறு பல அரசியல் கட்சிகளை இணைத்துக் கொள்வதற்கான முயற்சி எனவும் அதற்கு கலந்து கொள்ள வேண்டாம் என கட்சியினருக்கு அறிவித்துள்ளேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


0 Comments