அல்-மீசான் பௌண்டசன் தனது 11வது வருடமாகவும் நாடுதழுவிய ரீதியில் நடாத்திவரும் தலைமைத்துவ மற்றும் உளவியல் பயிற்சி பட்டறை இன்று காலை 08.00 மணி முதல் அல்-மீசான் பௌண்டசன்-ஸ்ரீலங்கா திருகோணமலை கிளை அலுவலக கேட்போர் கூட்டத்தில் இடம் பெற்று வருகிறது.இந்த பயிற்சி பட்டறையில் பாடசாலை,பல்கலைகழக மாணவ,மாணவிகள் 175 பேர் கலந்துகொண்டனர். முற்றிலும் இலவசமாக இடம்பெற்று வரும் இந்த பயிற்சி நெறியை யூத் ரோஸாஸ் எனும் தனியார் விளம்பரப்படுத்தல் கம்பனியினர் ஏற்பாடு செய்திருந்ததுடன் இப்பயிற்சி நெறியின் விரிவுரையாளர்களாக நாட்டின் தலைசிறந்த பல்கலைகழக விரிவுரையாளர்களும், மற்றும் பல அமைப்புகளை சேர்ந்த விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.எதிர்வரும் ஏப்ரில் வரை மட்டக்களப்பு,அம்பாரை,கொழும்பு,கேகாலை,நூவரலியா போன்ற மேலும் பல மாவட்டங்களில் இந்த தலைமைத்துவ மற்றும் உளவியல் பயிட்சி பட்டறை இடம்பெற இருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்: ஊடக செயலாளர் ,ஊடக பிரிவு,அல்-மீசான் பௌண்டசன்-ஸ்ரீலங்கா


0 Comments