Subscribe Us

மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி?

(நேர்­கா­ண­ல் : எஸ்.த­யா) 

மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படும்­பாடு சொல்லில் அடங்­கா­து. உயிர் போகுமளவிற்கு வலியால் துடி­து­டித்து போவார்கள். இதற்கு அறுவைச் சிகிச்சை தீர்வு என்­றாலும், உண­வுப்­ப­ழக்கம் மூலமும் தீர்வு காணலாம் என்கிறார் தேசமானிய வைத்திய நிபுணர் கிர்ஷாந்த். 

மூல நோய் எவ்வாறு ஏற்படுகின்றது?

மூல நோயானது சிக்கல் கார­ண­மாக ஏற்­ப­டு­கின்­றது. அதா­வது நாம் உண்ணும் உணவுசரி­யான முறையில் ஜீரண­மாகா­மையால் மலச் சிக்கல் ஏற்­படுவதால் மூல நோய் ஏற்­ப­டு­கின்­றது. 

இதற்கு மூலகாரணம் உரிய நேரத்தில் உணவு உண்­ணாமை. அதிக மாப்பொருள் அடங்­கிய உண­வு­களை உண்ணுதல், காபோ­வை­தரேட் அடங்­கிய உண­வு­களை உண்­ணுதல், தொடர்ந்து ஒரே வகை­யான உண­வு­களை உண்­ணுதல். நாம் உண்ணும் உணவில் பழங்கள், காபோ­வை­தரே­ட்டு உண­வுகள், கலோரின், புரோட்டின் அடங்­கிய உண­வு­களை உண்­ண­வேண்டும். ஒரு சிலர்
தொடர்ந்து ஒரே வகை­யான உணவை உட்­கொள்­வதால் உதா­ர­ண­மாக மா உணவை அதிகம் உட்­கொள்வதால் மூல நோய் ஏற்­ப­டு­கின்­றது. 

மூல நோய் எத்தனை வகையானது ? 
இந்நோயை இரண்டு மூன்று வகை­யாக பிரிக்­கலாம்?

உதா­ர­ண­மாக சொல்வதானால் பரம்­பரை நோயாக இருக்­கலாம். கர்ப்­பிணி தாய்­மார்­க­ள் குழந்­தையை பிர­சவித்த பின் தாய்க்கு கர்ப்பை பை கீழே இறங்­கு­வதால் சில­ருக்கு குதம் வெளியே தள்­ளப்­பட்டு ஏற்­படும் நோய் ஒன்­றாக காணலாம். பாஸ்பூட் அதா­வது இலகு உண­வு­களை உட்­கொள்­வதால் இந்த உண­வுகள் சமி­பா­டடை­யாமல் மலச்­சிக்­க­லினால் மூல நோய் ஏற்­ப­டலாம். சில­ருக்கு குருதி வெளி­யேறு­வதால் ஏற்­பட வாய்ப்­புள்­ளது. குதம் வெளி­யேறி பார­தூ­ர­மான ஆபத்தை  ஏற்­ப­டுத்­து­கின்ற நோயாக சில­ருக்கு ஏற்­படும். ஒரு சில­ருக்கு மலம் கழிக்கும் போது  வலி ஏற்­பட வாய்ப்­புள்­ளது.    



இந்நோய்க்­கான அறி­கு­றிகள் என்ன?

 ஆச­னவாய் பகு­தியில் இரத்­தக்­குழாய் தடிமன் ஆவ­தன் மூல­மாக உரு­வெ­டுக்­கி­றது. இதன் அறி­கு­றி­யாக முதலில் அரிப்பு ஏற்­படும். இயற்கை உபாதை கழிக்கும் போது மிகவும் சிர­மப்­பட வேண்­டி­யி­ருக்கும். வழக்­கத்­துக்கு மாறாக மலச்­சிக்கல் இருக்கும். சில நேரங்­களில் இரத்தம் வெளி­யேறும். அதன்­பி­றகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்­றவை இருக்கும். அழுத்தம் அதிகம் கொடுப்­பதால் ஆச­ன­வாயின் வெளிப்­ப­கு­தியில் சதை வளர்ச்சி ஏற்­படும். உள் பகுதி தடிமன் ஆவதை உள் மூலம் என்றும், சதை வெளித்­தள்ளும் போது வெளி­மூலம் என்றும் கூறு­கிறோம். 

இந்நோயை வருமுன் காக்­கலாம். உதா­ர­ண­மாக மூச்சு எடுப்­ப­தற்கு கடி­ன­மாக இருக்கும். வயிறு நிறைந்­தது போல் காணப்­படும். வாயுத் தன்மை நிறைந்­தது போல் காணப்­படும். பசி­த்தன்மை அதி­க­மாக இருக்­காது.  

மலம் கழிக்கும் போது இலகு­வாக இருக்­காது. மிகவும் கடி­ன­மாக இருக்கும். குடல் காயும் ­தன்மை அதா­வது குடல் காய்­வுத்­தன்மை காணப்­ப­டு­வதால் மலம் கழிக்­கும்­போது கடி­னமாக காணப்­ப­டும்­போது  எதிர்­கா­லத்தில் மூல நோய் வர­ வாய்ப்­புள்­ளது. இதனால் முறை­ப்படி உண­வு­களை எடுத்து மூல நோய் வராமல் பாது­காத்­துக்­கொள்­ள­வேண்டும். 

உணவு முறையை கடை­பி­டிப்­பது அவ­சி­ய­மா? இது பற்றி விளக்கம் தாருங்கள்?

ஒருவர் உணவில் கல்­சியம், புரதம், காபோ­வை­தரேட், கொழுப்பு ஆகிய உண­வுகள் கட்­டாயம் உண்­ண ­வேண்டும். உணவை உரிய நேரத்தில் எடுக்­க­வேண்டும். அதா­வது ஆறு மணித்­தி­யா­லத்­திற்கு ஒரு முறை உணவு உண்­ண­ வேண்டும். ஒரு சிலர் எட்டு, பத்து மணித்­தி­யா­ல­த்திற்கு பின் உணவு உண்­ணுதல், இன்னும் ஒரு சிலர் விரதம் இருப்­பதால் இந்த நோய் வரு­வ­தற்கு அதிக வாய்ப்­புகள் உண்டு.  காலை முதல் மாலை­வரை உணவு உண்­ணாமல் இரவில் உணவு உண்­பதால் உணவு சமி­ப­பாடடை­யாமல் இந்நோய் வர ­வாய்­ப்புள்­ளது. உதா­ர­ண­மாக மூச்சு எடுப்­ப­தற்கு கடி­ன­மாக இருக்கும். வயிறு நிறைந்­தது போல் காணப்­படும். 

வாயுத் தன்மை நிறைந்­தது போல் காணப்­படும். பசித்­தன்மை அதி­க­மாக இருக்­காது. இந்த கு­ணாதி­சயங்கள் காணப்­பட்டால் கட்­டா­ய­மாக விரதம் இருப்­பதை தவிர்க்­க­வேண்டும். உதா­ர­ண­மாக அதிக மிளகாய் தூள் கலந்த உண­வுகள் உண்­பதை தவிர்த்­து­கொள்­ள­வேண்டும். மேலும் காயத்­தன்மை உள்ள உண­வுகள் உட்­கொள்­வதை தவிர்த்து கொள்­ள­வேண்டும். 

உட­ன­டி­யாக சமி­பாடடையக் கூடிய திர­வ­மான உண­வு­களை உட்­கொள்­வதால் யாரையும் மூல நோய் பாதிக்­காது. நாம் அருந்தும் நீரின் அளவு குறைந்தால் இது வர­ வாய்ப்­புள்­ளது. நீரை அதி­க­மாக அருந்து­ப­வர்­க­ளுக்கு இந்த நோய் பாதிக்­காது. 

வயது அடிப்­ப­டையில் ஏற்­ப­டுமா?

பொது­வாக எல்லா வய­தி­ன­ருக்கும் இந்த நோய் வர வாய்ப்­புள்­ளது. உணவு பழக்­க­வ­ழக்­கங்கள், இலகு உண­வுகள் (பாஸ் பூட்) உதா­ர­ண­மாக சீஸ், கொத்து ரொட்டி போன்­ற­வற்றை உண்­பதால் வர அதிக வாய்­ப்புள்­ளது. பட்டர், மாப் பொருட்கள் போன்ற மேலைத் தேய பொருட்­களை உண்­பதால் இந்நோய் வர ­வாய்ப்­புள்­ளது. உட­ன­டி­யாக சமிபாடு அடையக் கூடிய பொருட்­களை உண்­ண­ வேண்டும். உதா­ர­ண­மாக  சோறு உண்ணும் ஒருவர் மூன்று நேரமும் சோறு உண்டால் அது சமி­பாடு அடையக் கூடி­ய­தாக இருக்கும்.  

உதா­ர­ண­மாக இரவு நேரத்தில் கோதுமை மாவால் தயா­ரிக்­கப்­பட்ட கொத்து ரொட்டி, ரொட்டி போன்ற­வற்றை உண்­பதால் இவர்­க­ளுக்கு மறு நாள் காலையில் காலை­க்க­டனை செய்­வ­தற்கு அசௌக­ரி­ய­மாக இருக்கும். அதா­வது பொது­வாக இலகு­வாக மலம் கழிப்­ப­தற்கு பதி­லாக மிக கஷ்­டப்­ப­டு­வார்கள். 

இதற்­காக பழங்­களை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்­ள­வேண்டும். சைவ உணவை எடுத்துக் கொண்டால், உணவின் பின் ரசம், பாயாசம் போன்றவை கடை­களில் வழங்­கப்­ப­டு­கின்றன. இவற்றை உண்­பதால் இந்த  பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண முடியும். மேலும் உண­வுக்கு பின் டெசட் சாப்­பி­டு­கின்றோம். உணவு இலகுவில் சமிபா­டடைய சாப்­பி­டு­கின்றோம். பப்­பாளி, வாழைப்­பழம், யோகட் போன்­ற­வற்றை உட்­கொள்­வதால் இந்த பிரச்­சி­னை­யி­லி­ருந்து விடுப­டலாம்.  ஆதி­கா­லத்தை எடுத்து கொண்டால் அக்­கால மக்­க­ளி­டையே இந்த பிரச்­சினை காணப்­ப­ட­வில்லை. காரணம், இந்த கா­லத்தில் இலகு உண­வுகள், பிஸ்கட் போன்­ற­வற்றை உண்­பதால் சமி­பாடு அடை­வதில் பிரச்­சினை ஏற்­படும். 

 உதார­ண­மாக இடியப்ப உரலில் இட்ட மாவு சரி­யான முறையில் பிணைந்­தி­ருந்தால் இலகு­வாக இடியப்பம் வெளியில் வரும். எதிர்­பாராத வித­மாக அந்த மாக் கல­வையில் ஏதா­வது சிக்கல் இருந்தால் மா வெளியில் வரு­வது கடி­ன­மாக இருக்கும். அந்த இடியப்ப உரலின் அடி தட்­டோடு கழன்று வரும். அதே போல் தான். மலம் சரி­யான முறையில் வெளி­வ­ரு­வதில் பிரச்­சினை இருந்தால் ஆசனப்­ப­குதி வெளி­யே வ­ர­வாய்ப்­புள்­ளது. 


இந்த நோயை முற்­றாக கட்­டுப்­ப­டுத்­த­லாமா?

ஒரு­சிலர் அறு­வைச்­சி­கிச்சை செய்த பின்னர் உணவில் கட்­டு­ப்பாடு இன்மையால் மீண்டும் அவர்­க­ளுக்கு வர­ வா­ய்ப்­புள்­ளது. 

இந்த நோய்க்­கா­க சிகிச்சை பெறு­வ­தற்கு சில வகை­யான ஒயின்மன்ட், கிரீம் வகை­களை நேர­டி­யாக பாவித்தல், மருந்­து­களை உட்கொண்டு சமிபாட்டுத் தொகு­தியை நல்ல முறையில் வைத்­துக்­கொள்­ள­வேண்டும். 

இந்நோய் உள்­ள­வர்கள் உணவு பழக்­க­வ­ழக்­கங்­களை கண்­டிப்­பாக கடைப்­பி­டிக்க வேண்டும். பழங்­களை அதி­க­மாக உண்­ண­வேண்டும்,  உட­ன­டி­யாக சமி­பாடு அடையக் கூடிய உண­வு­க­ளான பொங்கல், பாற்சோறு போன்­ற­வற்றை அதிக உண்­ண­வேண்டும். 

அதி­கா­லையில் எழுந்­த­வுடன் ஒரு போத்தல் தண்ணீர் அருந்த வேண்டும்.  குளி­ரான தண்­ணீரை குடித்தால் சமி­பாட்டு தொகு­தி­யி­லி­ருந்து வெளி­யே­று­வது கடி­ன­மாக இருக்கும். கொதித்து ஆறிய தண்­ணீரை குடித்தால் சமி­பாட்டு தொகு­தியில்சரி­யாக செயற்­பட்டு மலம் வெளி­யே­று­வது மிக இலகு­வாக இருக்கும். இவர்­க­ளுக்கு தொடர்ந்து உளுந்தங் கஞ்சி, தோசை போன்றவற்றை இரவில் உண்­பதால் மலம் கழிப்­பதில் பிரச்­சினை ஏற்­ப­டாது.  

மேலதிக விபரங்களுக்கு:

தேசமானிய வைத்திய நிபுணர் கிர்ஷாந்த்,
சுகாதார அமைச்சின் மாகாண ஆலோசகர், 
எப்பிலைப் வைத்தியசாலை,
வெல்லம்பிட்டிய.

தொலைபேசி இலக்கம்.
011-4269137/ 077-7677847. 

Post a Comment

0 Comments