இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களது உத்தியோகபூர்வ அலுவலகத்தின் ஐந்து அறைகள் மூடப்பட்டு, அரச முத்திரையிடப்பட்டுள்ளது.
மின்சாரத்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறைகளில் உள்ள காகிதாதிகள் இடமாற்றம் செய்யப்படாதிருக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு நடைபெற்ற மோசடிகள் குறித்து முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


0 Comments