சர்வதேச பாடசாலைகள் ஒவ்வொன்றும் கட்டாயம் அரசாங்கத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், அவ்வாறு பதிவு செய்த பாடசாலைகள் தமது பதிவை ஒவ்வொரு வருடமும் புதுப்பித்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பாடசாலைகளை தரமுள்ளதாக செயற்பட வைப்பதற்கே இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் இதற்கான தகுதியை கண்டறிவதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.


0 Comments