தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை ஆதரித்து நடிகர் சல்மான்கான் இலங்கைக்கு வந்து பரப்புரை செய்தமைக்கு கண்டனம் தெரிவித்த தமிழ் அமைப்புகள் மும்பையில் உள்ள சல்மான்கான் வீட்டை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தின.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், நாங்கள் எங்களது இதயத்தில் இருந்து சல்மான்கானை நீக்கிவிட்டோம். அவர், தமிழ் மக்களின் உணர்வுகளை பற்றி நினைக்கவில்லை. சல்மான்கான் மன்னிப்பு கேட்கும் வரையில் போராட்டம் நடத்துவோம் என்றனர்.
போர் குற்றவாளி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்த சல்மான்கானுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறோம் என்ற வாசகம் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக சல்மான்கான் வீட்டுக்கு முன்பு பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


0 Comments