Subscribe Us

header ads

எதிர்வரும் பொதுத்தேர்தலில் சந்திரிகா, மஹிந்த மைத்­தி­ரி மூவரையும் ஒரே தேர்தல் பிரசார மேடைகளு க்கு அழைத்துவர திட்டம்


எதிர்­வரும் ஜூன் மாதம் நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணி தேர்தல் நட­வ­டிக்­கைகளை மேற்­கொள்வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவும் இணைந்து செயற்­ப­டவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. 
சில காலம் அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து ஒதுங்­கி­யி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் எதி­ர­ணியின் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வெற்றி பெற­செய்ய பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டி­ருந்தார். அன்று முதல் மீண்டும் அவர் அர­சியல் களத்­துக்கு திரும்­பி­யுள்ளார்.
அதே­வேளை, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க கடந்த வாரம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இடம்­பெற்ற தேசிய செயற்­குழு கூட்­டத்­திலும் கலந்து கொண்­டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ஆலோ­ச­க­ரான முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க எதிர்­வரும் பொதுத் தேர்­த லில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மை­யி­லான கூட்­ட­ணியின் தேர்தல் பிர­சார நட­வ­டி க்­கை­களில் நேர­டி­யாகக் கள­மி­றங்க உள்­ள­தா­க வும் அந்த வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.
இதே­வேளை, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவையும் இந்த முன்­ன­ணி யின் தேர்தல் பிர­சா­ரங்­களில் இணைத்துக் கொள்­வ­தற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகிய மூவரையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார மேடைகளு க்கு அழைத்துவர அவர்கள் திட்டமிட்டுள்ள தாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. Virakesari.lk

Post a Comment

0 Comments