Subscribe Us

header ads

கோடிகளை அள்ளிகொடுக்க இருக்கும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2015

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் பெப்ரவரி 14 திகதி முதல் மார்ச் 29ம் திகதி வரை நடக்கிறது.

இந்தப்போட்டியில் பங்கேற்கும் 14 நாடுகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவு:-

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.

‘பி’ பிரிவு:-

இந்தியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

பரிசு தொகை:-

உலகக்கிண்ண போட்டிக்கான மொத்த பரிசு தொகை ரூ.79 கோடியாகும். இது கடந்த முறையை விட 30 சதவீதம் கூடுதலாகும். 2007ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியோடு ஒப்பிடுகையில் பரிசு தொகை 2 மடங்காகும்.

2015 உலகக்கிண்ணத்தை வெல்லும் அணிக்கு ரூ. 24 கோடி பரிசு வழங்கப்படும். 2வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10 கோடி கிடைக்கும்.

மேலும் அரையிறுதியில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கு தலா ரூ.5.4 கோடியும், காலிறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

Post a Comment

0 Comments