Subscribe Us

header ads

யாழ்ப்பாணத்தில் கடவுள் சிலைகளில் சத்தியம் வாங்கும் டக்ளஸ் குழுவினர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு யாழ்ப்பாண மக்களிடம் கடவுள் சிலைகளின் மீது சத்தியம் வாங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.

இதற்காக சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நிதியுதவியாக ரூ.2500 வீதம் வழங்கப்படுகின்றது.

பின்னர் தங்கள் வாக்குகளை ஜனாதிபதி மஹிந்தவுக்கே வாக்களிப்பதாக அவர்கள் கடவுள் சிலைகளின்மீது சத்தியம் செய்யுமாறு கோரப்படுகின்றார்கள்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. யினரே மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் யாழ்ப்பாணத்தில் கல்வி அறிவு கொண்ட தமிழ் சமூகம் இவர்களின் ஏமாற்று வேலையில் சிக்காது என்றே சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments