Subscribe Us

header ads

தேன் இனியது மட்டுமல்ல புண்களுக்கு மருந்தாகவும் பயன்படும்


(டொக்டர்.எம்.கே.முருகானந்தன்)
தேன் குடிப்­பது குள­வி­க­ளுக்கு மட்டும் உவப்­பா­ன­தல்ல. யானைகள், கர­டிகள் முத­லான மிரு­கங்கள் முதல் மனி­தர்­க­ளான நாமும் அதன் இனிய சுவையில் மகிழ்­கின்றோம். தேன் போஷாக்­குள்ள பதார்த்­தமும் கூட. அதன் சிறப்பு சுவை­யுடன் மட்டும் முடி­வ­டை­வ­தல்ல, மருத்­துவ குணங்­களும் நிறைந்­தது என இயற்கை மருத்­துவம் கொண்­டா­டு­கின்­றது.

அது எமது பாரம்­ப­ரிய வைத்­திய முறை­க­ளிலும் வீட்டு வைத்­தி­யத்­திலும் தேன் நிறை­யவே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்­பது உங்­க­ளுக்குத் தெரியும். வயிற்றுப் பிரச்­சி­னை­க­ளுக்கு நல்­லது என நம்­பு­கிறோம். பண்­டைய காலம் முதல் தேனை காயங்­க­ளுக்­கான மருந்­தாகப் பயன்­ப­டுத்தி வந்­தி­ருக்­கி­றார்கள்.
இருந்­த­போதும் இவை யாவும் வெறும் நம்­பிக்­கை­களின் அடிப்­ப­டையில் மட்­டுமே பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவே கொள்ள வேண்டும். அதற்கு மேலாக விஞ்­ஞான பூர்வ ஆராய்­வு­களால் கண்­ட­றி­யப்­பட்ட மருத்­துவ குணங்கள் ஏவை­யேனும் தேனுக்கு உள்­ளதா?
விஞ்­ஞான பூர்வ தக­வல்கள்
உரசல் காயங்­க­ளுக்கும், ஆழ­மற்ற வெட்டுக் காயங்­க­ளுக்கும், சீழ்ப் பிடித்த புண்­க­ளுக்கும் மருந்­தாக உதவக் கூடி­யது தேன் என சில ஆய்­வுகள் கூறு­கின்­றன.இருந்­த­போதும் ஆழ­மான புண்­க­ளுக்கும் பூச்சிக் கடி­களால் ஏற்­பட்ட புண்­க­ளுக்கும் ஏற்ற­தல்ல என்­பதைக் கவ­னத்தில் கொள்ள வேண்டும். அத்­துடன் நாளப்­பு­டைப்பு நோயால் ஏற்­படும் புண்­க­ளுக்கும் ஏற்­ற­தல்ல. இத்­த­கைய புண்கள் குண­ம­டை­வதைத் தேன் தாம­திக்கச் செய்யும் என்று கண்­ட­றிந்­துள்­ளார்கள்.
மிகக் கடு­மை­யான சிலவகை தொற்­று­களைத் (MRSA) தணிக்க தேன் உதவும் என சில ஆய்­வுகள் கூறி­யுள்­ளன.புண்கள் குண­மா­வ­தற்கு தேன் எவ்­வாறு உத­வு­கி­றது?
தேன் புண்­களின் வலியைக் குறைக்­கி­றது. ஆறுதல் அளிக்கும் உணர்வைக் கொடுக்­கின்­றது.
புண்­களில் உள்ள சீழ், அழுக்குச் சவ்வு போன்­றவை விரைவில் கரைய வைத்து புதிய ஆரோக்­கி­ய­மான திசுக்கள் உரு­வாக உத­வு­கின்­றன. புண் குண­மா­கி­யதும் விரைவில் ஆரோக்­கி­ய­மான தோல் மேவி வளர்­வ­தற்கு உத­வு­கின்­றன.தேன் அசிடிக் தன்­மை­யா­னது அதன் PH வலு 3.2 முதல் 4.5 ஆகும். இது கிரு­மிகள் பெரு­கு­வதைத் தடுக்க உத­வு­கி­றது.

இவைதான் மருத்­துவ ஆய்­வு­களின் முடி­வு­க­ளாகும். புண்கள் விரைவில் குண­மாக இவற்றை விட வேறென்ன தேவை?தேன் எவ்­வாறு குண­மாக்­கு­கி­றது?
புண்ணைக் குண­மாக்­கு­வ­தற்கு தேனில் உள்ள எத்­த­கைய அம்­சங்கள் உத­வு­கின்­றன எனக் கேட்­கி­றீர்­களா?
1. தேனில் உள்ள சீனியின் அதிக செறி­வுத்­தன்­மையும், குறைந்த ஈர­லிப்புத் தன்­மையும் கிரு­மி­களை அண்­ட­வி­டாது தடுக்­கின்­றன.
2. இத்­துடன் தேனில் உள்ள குளுக்­கோனிக் அமி­லத்தால் உண்­டாகும் அமில ஊட­கமும், அதி­லுள்ள ஐத­ரசன் பெரோக்­ஸைடும் இணைந்து சீழ்ப் பிடிக்க வைக்கும் கிரு­மிகள் பெரு­கு­வதைத் தடுக்­கின்­றன என ஆய்­வா­ளர்கள் கூறு­கி­றார்கள்.
கிருமி தொற்றிச் சீழ்ப்­பி­டித்த புண்­க­ளுக்கு தேன் இட்டு சிகிச்சை செய்­த­போது அதி­லுள்ள கிரு­மிகள் 3முதல்10 நாட்­க­ளுக்குள் முற்­றாக அழிந்து கிரு­மிப்­பற்­றற்ற புண்­க­ளாக மாறி­ய­தாக மூன்று வெவ்வேறு ஆய்­வு­களின் முடி­வுகள் சொல்­கின்­றன.

3. அத்­துடன் புண்­ணி­லுள்ள வீக்­கத்தைத் தணிக்கும் ஆற்­றலும் தேனுக்குள்­ளது.
புண்ணைக் குண­மாக்க எவ்­வ­ளவு தேன் தேவை?
புண்­களைக் குணப்­ப­டுத்த எவ்­வ­ளவு தேன் இட­வேண்டும். மெல்­லிய படை­யாக இட்டால் போதும் என இரு மருத்­துவ அறிக்­கைகள் கூறின. ஆயினும் ஏனைய பல மருத்­துவ அறிக்­கை­கள் தாரா­ள­மாகத் தேன் இடு­வது பற்­றியும் இன்னும் சில புண்­க­ளின்மேல் தேனை ஊற்­றி­ய­தா­கவும் கூறின.
எனவே எவ்­வ­ளவு தேன் இட­வேண்டும் என்­பது பற்றி தெளி­வான, கருத்­தொ­ரு­மைப்­பாடு இல்லை என்­பது தெளி­வா­கி­றது. புண் உலர்ந்து போகாத அள­விற்கு தேனின் அளவு இருந்தால் போதும் என்­பது அறிவு பூர்­வ­மான கருத்­தாகும்.
தேனினால் புண்­களைச் சுத்­தமும் செய்­யலாம்
பொது­வாக மருந்து கட்­டும்­போது சேலை­னினால் அல்­லது பொவிடின் போன்ற மருந்­து­களால் முதலில் சுத்தம் செய்­கின்றோம். இதற்குப் பதி­லாக தேனைக் கொண்டே சுத்தம் செய்த பின் அத­னையே இட்டு மருந்து கட்­டலாம்.
நெருப்புச் சுட்ட புண்கள்
நெருப்புச் சுட்ட புண்­க­ளுக்கும் தேன் மிகவும் சிறந்­த­தாகும். நெருப்பு, சுடுநீர், கொதி எண்ணெய் போன்­ற­வற்றால் ஏற்­படும் சூட்டுக் காயங்­க­ளுக்கு உட­ன­டி­யாகத் தேன் இட்டால் வேதனை தணியும். காயமும் விரைவில் குண­மாகும்.
வாய்ப் புண்கள்
வாய்ப் புண்­க­ளையும், முரசு கரை­த­லையும் தேன் குண­மாக்கும் எனச் சொல்­லப்­ப­டு­கி­றது. நியூஸிலாந்தில் வளரும் மனுக்கா என்ற தாவ­ரத்தில் இருந்து பெற்ற தேனைக் கொண்டு செய்­யப்­பட்ட ஒரு­வகை இனிப்புப் பண்டம் வாய்ப்­புண்­க­ளையும் முரசு கரை­த­லையும் மாற்­று­கி­றது என சில ஆய்­வுகள் கூறு­கின்­றன.
20ஆம் நூற்­றாண்­டின் ஆரம்­பத்தில் நுண்­ணுயிர் கொல்லி மருந்­துகள் கண்டு பிடிக்­கப்­பட்­டிரா விட்டால் இன்று புண், காயம், மற்றும் சத்­திர சிகிச்சை தேவை­க­ளுக்­கான முக்­கிய பொரு­ளாக தேன் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் என்­பது உறுதியாக கூறலாம்.
பிள்­ளைகள் மருந்து கட்­டு­வ­தென்றால் அல­றி­ய­டித்து ஓடு­வது வழக்கம். முதலில் வாயில் சற்று தேனை ஊட்­டி­விட்டு, தேனால் சுத்தம் செய்து தேன் இட்டு மருந்து கட்­டு­வ­தென்றால் தாங்­க­ளா­கவே ஓடி வரு­வார்கள் என்­பது திண்ணம்.
தேனின் வேறு மருத்­துவப் பயன்கள்
தேனா­னது இரைப்பை அமி­லங்கள் மேல் எழு­வதைத் தடுக்க உதவும் என காத்­மண்­டுவைச் சார்ந்த பேரா­சி­ரியர் Mahantayya V Math பிர­பல மருத்­துவ சஞ்­சி­கை­யான BMJயில் எழு­தி­யுள்ளார்.
குழந்­தை­களில் ஏற்­படும் வயிற்­றோட்ட நோய்­க­ளுக்கு தேன் உதவும் என E. Haffejee and A. Moosa BMJ யில் எழு­தி­யி­ருந்­தனர். பக்­டீரியா கிரு­மி­களால் ஏற்­படும் வயிற்­றோட்ட நோய்கள் குண­மா­வதை தேன் துரி­த­மாக்கும் என்­பதே அவ­ரது முக்­கிய கருத்­தாகும். மருந்­தாகப் பயன்­ப­டுத்த முடியும் என்று கூற­வில்லை.

குழந்­தை­களைத் தொல்­லைப்­ப­டுத்தும் இரவு இரு­மலைத் தணிக்க தேன் உதவும் என தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஏனைய இருமல் மருந்­து­களை விட குழந்­தை­களின் இரவு இரு­ம­லையும் அதனால் ஏற்­படும் தூக்கக் குழப்­பத்­தையும் தணிக்க தேன் உத­வி­யது என சில பெற்­றோர்கள் கூறி­ய­தாக மேலும் தெரி­வித்­தி­ருந்தது.சில வகை ஒவ்­வா­மை­க­ளுக்குத் தேன் உதவும் எனச் சொல்­லப்­பட்­ட­போதும் தெளி­வான ஆதா­ரங்கள் இல்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
தேனின் சிறப்பம்­சங்கள் எவை?
சுத்­த­மான தேன் என்­றுமே பழு­த­டை­யாது. பிரிட்ஸில் வைத்துப் பாது­காக்க வேண்­டிய தேவை எதுவும் இல்லை.மனி­த­னுக்கு தெரிந்த மிகப் பழை­மை­யான உணவு வகை­களில் இதுவும் ஒன்று. ரட் மன்­னரின் கல்­ல­றையில் இருந்து கண்­டெ­டுக்­கப்­பட்ட புரா­தன காலத் தேனா­னது, இன்றும் உண்ணக் கூடிய நிலையில் சற்றும் பழு­த­டை­யாது இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.
தேனின் போஷனை
தேனில் உள்ள .இனிப்பின் பெரும்­ப­குதி பழங்­களில் இருந்து கிடைக்கும் புரக்டோஸ் வகையைச் சார்ந்­தது. இதனால் நாம் வழ­மை­யாகப் பாவிக்கும் சீனியை விட 25 சத­வி­கிதம் இனிப்புக் கொண்­டது.
ஒரு தேக்­க­ரண்டி தேனில் 64 கலோரிச் சத்து உண்டு. இது எமது உடற்­த­சை­களின் இயக்­கத்­திற்­கான சக்­தியை வழங்­கு­கி­றது. தேனில் 17.1 சத­வி­கித நீர்ப்­பற்றே உண்டு. மிகுதி 82.4 சத­வி­கி­தமும் மாச்­சத்­தாகும். இந்த மாச்­சத்­துத்தான் இனிப்­பாக எமக்குக் கிடைக்­கி­றது. அதிக கலோரி வலு கார­ண­மாக நீரி­ழிவு நோயா­ளருக்கு உகந்­தது அல்ல என்­ப­தையும் குறிப்­பிட வேண்டும்.
மிச்­ச­முள்ள 0.5 சத­வி­கிதம் மட்­டுமே புரதம், விட்­ட­மின்கள் மற்றும் தாதுச்­சத்­தாகும்.கொழுப்­புச்­சத்து, கொலஸ்­ட்ரோல் ஆகி­யன அடி­யோடு இல்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
இந்த மாப்­பொ­ருளில் பழ­வகை இனிப்­பான புரக்டோஸ் 38.5 சத­வி­கி­த­மாகும். குளுக்கோஸ் 31 சத­வி­கி­த­மாகும். மிகுதி 12.9 சத­வி­கிதம் மோல்டோஸ், சுகுரோஸ் போன்ற ஏனைய சீனி­வ­கை­க­ளாகும். இதனால் விரைவில் ஜீர­ண­ம­டையும் தன்மை கொண்­டது.

பக்­க­வி­ளை­வுகள்
தேன் பொது­வாகப் பக்க விளை­வுகள் அற்ற பொரு­ளாகும். தேனுக்கு ஒவ்­வாமை ஏற்­ப­டு­வது அரிது. அதில் உள்ள பூக்களின் மகரந்தங்களுக்கும், தேனீ பூச்சியின் புரதங்களுக்கும் ஒவ்வாமை ஏற்படலாம் என எதிர்பார்த்தாலும் அவ்வாறு ஏற்பட்டதான மருத்துவ அறிக்கைகளைக் காண முடியவில்லை.
ஆதாரமற்ற நம்பிக்கை
தேனுடன் தண்ணீர் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் மெலி யுமாமே என ஒரு நோயாளி என்னிடம் கேட்டார். இது பற்றி மருத்துவ இணைய தளங்களில் தேடியபோது அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால் தேனில் 82.4 சதவிகிதமும் மாச்சத்துள்ளது என்ற தகவலை வைத்து விஞ்ஞான பூர்வமாகவும், தர்க்க ரீதியாக வும் சிந்தித்தால் இதில் எந்தவித உண் மையும் இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. வெற்று நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்டு மருத்துவ விட யங்களில் தீர் மானிக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு ஆதாரம்.
/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice 

Post a Comment

0 Comments