Subscribe Us

header ads

மூவாயிரம் ஆசிரியர்களுக்கான போட்டிப்பரீட்சை 28இல்

மலையகத் தமிழ்ப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு மூவாயிரம் தமிழ் ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்குவதற்கான முன்னோடி போட்டிப்பரீட்சைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளன. 
இப்போட்டிப் பரீட்சைகள் மலையகத்தின் பல்வேறு பகுதிகளின் மத்திய நிலையங்களில் இடம்பெறும். இப்பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு அதற்கான அழைப்புக்கள் இம்மாத நடுப்பகுதியில் அனுப்பப்படும். 
கால் நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்குமிடையில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானின் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையினையடுத்தே மூவாயிரம் ஆசிரியர் நியமனங்களை வழங்க இணக்கம் காணப்பட்டது. 
இக்கலந்துரையாடலில் மலையகத்தின் அனைத்து தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாகவும் அப் பாடசாலைகளில் பாட ரீதியான ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டன. இதனடிப்படையிலே மூவாயிரம் ஆசிரியர் நியமனங்கள் வழங்க இணக்கம் காணப்பட்டது. 

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice 

Post a Comment

0 Comments