அமைச்சர் சம்பிக ரணவக்க மற்றும் மேல்மாகாண
அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் தத்தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து
விலகுவதாக அறிவித்த கையோடு. ஆளுந்தரப்பின் சகல உறவுகளையும்இன்றுடன்
முறித்துக் கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.
எனினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை
ஒழிப்பு உட்பட்ட தமது 35 கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்ந்தும்
பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி
சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
ஜாதிக ஹெல உறுமய தனது அரசியல் வரலாற்று
முக்கிய தீர்மானத்தினை வெளியிடப்போகும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில்
தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே, அங்கு இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுரலியே ரத்ன தேரர், பாட்டலி சம்பிக ரணவக,
ஒமல்பே சோபித தேரர், உதய கம்மன்பில மற்றும் நிஷாந்த வீரசூரிய ஆகியோர் இவ்
ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
நன்றி: Daily Ceylon
0 Comments