ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு மூன்றாவது முறையும் முடியாது! சட்ட விரோத ஜனாதிபதி தேர்தல் வேண்டாம்! என்ற கோஷங்களுடன் ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம் நேற்று (18) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி மருதானை ஆனந்த கல்லூரி அருகில் ஆரம்பித்து, புறக்கோட்டை பரடைஸ் மைதானத்தில் முடிவடைந்திருந்தது.
வீதி நெடுகிலும் பெருந்திரளான பொதுமக்களுடன் அதுரலிய ரத்ன தேரர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார, பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க, இலங்கை வெகுஜன ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவி மந்தனா, வழக்கறிஞர் நாமல் ராஜபக்ச மேலும் சமூக ஆர்வலர்கள் பெருந்திரளாக இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் ஆர்பாட்ட பேரணியால் நேற்று மாலை மருதானை முதல் புறக்கோட்டை வரையான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்து இருந்த்து.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice
0 Comments