Subscribe Us

header ads

மைத்திரியின் மாபெரும் மக்கள் சந்திப்பு எதிர்வரும் 2ஆம் திகதி கொழும்பு கைக் பார்க்கில்


எதிர் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் முதலாவது மாபெரும் மக்கள் சந்திப்பு 2ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையில் கொழும்பு கைக் பார்க்கில் நடைபெறவுள்ளது. இந்த அறிவித்தலுக்குரிய போஸ்டர் கொழும்பு முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ளது. 
இதில் மாதுலுவாவே சோபித்த தேரர்மைத்திரிபாசிறிசேனமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கஜே.வி.பி அனுரகுமார திசாநயாக்க,ரணில் விக்கிரமசிங்கரீ.என்.ஏ சுமந்திரன்மனோகணேசன்சரத் பொன்சேகா மற்றும் ஏனைய கட்சிகள் தொழிற்சங்க பிரதிநிதிகள் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏகாதிபத்திய ஜனாதிபதிமுறை, குடும்ப ஆட்சிஇராணுவ ஆட்சி,பொதுச்சொத்துக்கள் சூறையாடுதல் போன்ற பல்வேறு தலைப்புக்களில் இந் நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அஷ்ரப் ஏ சமத்

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments