-பி. முஹாஜிரீன்-
அட்டாளைச்சேனை பிரதேச
செயலகத்திற்குட்பட்ட பாலமுனை 02 கிராம சேவகர் பிரிவில் திவிநெகும –
வாழ்வின் எழுச்சி 6ம் கட்ட ஆரம்ப நிகழ்வு பாலமுனை 02ம் பிரிவிலுள்ள தெரிவு
செய்யப்பட்ட பயனாளி ஒருவரின் இல்லத்தில் இன்று (20) திங்கட்கிழமை
நடைபெற்றது.
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச். தம்ஜீது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சின்னப்பாலமுனை இராணுவ முகாம் படை அதிகாரி மற்றும் அல் ஹிக்மா வித்தியாலய பிரதி அதிபர் பி. முஹாஜிரீன், கிராம சேவை உத்தியோகத்தர் எம்.எம். பரிவின் உட்பட மதத் தலைவர்களும் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் முதற் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பழ
மரக்கன்றுகளும், செடிகளும், புதிய வகை பயிர் விதைகளும் வழங்கி
வைக்கப்பட்டன. இதில் கலந்து கொண்ட அதிகாரிகள் மரக்கன்றுகளையும் நட்டி
வைத்தனர்.
0 Comments