Subscribe Us

header ads

திரைப்படங்களில் இடம்பெறுவது போன்ற சுரங்கம் அமைத்து வங்கியில் கொள்ளை


அரியானா மாநிலத்தில் திரைப்படங்களில் இடம்பெறுவது போன்ற கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

125 அடி நீள சுரங்கம் அமைத்து வங்கியில் கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.

அரியானா மாநிலம்  ஹோகானா  நகரில் உள்ள  பஞ்சாப் தேசிய வங்கியிலேயே கடந்த சனிக்கிழமை (25) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ​
இருப்பினும், இந்த சம்பவம் குறித்த தகவல்கள் தற்போதுதான் வௌியே தெரியவர ஆரம்பித்துள்ளன.

கொள்ளையர்கள் கட்டிடத்தின் 3 அறைகளில் சுரங்கம் தோண்டும் பணியை செய்துள்ளனர்.  அது யாருக்கும் தெரியாமல் நீண்ட நாட்களாக நடைபெற்று இருந்திருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Post a Comment

0 Comments