Subscribe Us

header ads

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் பரீட்சை எழுதி பாடசாலை மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் மரணம்! -

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்­சையில் 168 புள்­ளி­களைப் பெற்று பாட­சாலை மட்­டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற மாண­வன் ஒருவன் புற்­று நோய் கார­ண­மாக  உயி­ரி­ழந்­துள்­ள­ சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.


கெப்­பத்­தி­கொல்­லாவ கிம்­பி­ரி­வவ பிர­தேச கனிஷ்ட பாட­சாலை  ஒன்­றின் மா­ண­வனே இவ்­வாறு மர­ண­ம­டைந்­துள்­ள­தாகத் தெரிய வரு­கி­றது.


மஹ­ர­கம புற்­று­ நோ­யாளர் வைத்­தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்­டி­ருந்த போதே வகுப்­புக்­க­ளுக்குச் செல்­லாது புலமைப் பரிசில் பரீட்­சைக்குத் தோற்றி பரீட்சை முடி­வு­களைப் பெற்ற பின்னரே இந்த மாணவன் உயி­ரி­ழந்­துள்ளான்.

இம்­மா­ணவன் பாட­சா­லையில் மிக திற­மை­காட்டி வந்­துள்­ள­துடன் புலமைப் பரிசில் பரீட்­சைக்குத் தோற்ற வேண்டும் என்று ஆவ­லுடன் இருந்­துள்­னான். இதன் கார­ண­மாக புலமைப் பரிசில் பரீட்­சைக்கு முதல் நாள் வீடு வந்து பரீட்சை எழுதி விட்டு அன்றே மீண்டும் மக­ர­கமை புற்று நோயாளர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகப் பெற்றோர் தெரிவித்தனர். 

Post a Comment

0 Comments