Subscribe Us

header ads

மாணவனை நாய் கூண்டில் அடைத்த பள்ளிக்கூடம் மீண்டும் மூடப்பட்டது: கேரள ஐகோர்ட்டு நடவடிக்கை


திருவனந்தபுரம் குடப்பன குன்னு என்ற இடத்தில் ஒரு தனியார் ஆங்கிலப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியின் முதல்வராக சசிகலா என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ– மாணவிகள் படித்து வந்தனர். இந்த பள்ளியில் படித்த யுகேஜி மாணவன் ஒருவன் வகுப்பறையில் சகமாணவனுடன் பேசியதற்காக அவனுக்கு கொடூரமான தண்டனை வழங்கப்பட்டது.

அந்த பள்ளிக்கூடத்தின் வளாகத்தில் உள்ள நாய் கூண்டில் அந்த சிறுவன் அடைக்கப்பட்டான். பள்ளி முதல்வர் சசிகலா உத்தரவின் பேரில் ஆசிரியை ஒருவர் இந்த மனிதாபிமான செயலில் ஈடுபட்டார். இந்த விஷயம் வெளியில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார். அந்த பள்ளிக்கூடமும் மூடப்பட்டது. இந்த நிலையில் சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுவதால் அந்த பள்ளியை திறக்க கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பள்ளிக்கூடம் கடந்த வாரம் திறக்கப்பட்டது. இதை எதிர்த்து நாய் கூண்டில் அடைக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் சார்பில் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அந்த பள்ளிக் கூடத்தை மீண்டும் மூட உத்தரவு விட்டார். மேலும் இதுபற்றி விளக்கம் கேட்டு கேரள அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசும் அனுப்பி உள்ளது. 

Post a Comment

0 Comments