ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கோ, ராஜபக்சவின் குடும்பத்தினருக்கோ, அவர்களை சுற்றியிருப்போருக்கோ நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் முக்கியமல்ல என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நுகேகொடையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு தேவை அதிகாரம் மாத்திரமே. நாட்டில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வை கண்ட பின்னர், ஜனாதிபதித் தேர்தலை 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்த முடியும்.
ஆனால், நாட்டில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு ராஜபக்சவினரால் தீர்வு காண முடியாது என்பதால், அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் .
https://www.facebook.com/kalpitiyavoice

.jpg)
0 Comments