ஐ.தே.கவில் இருந்து விலகி ஆளும் பொதுஜன
ஐக்கிய முன்னணியோடு இணைந்துகொண்ட மாத்தளை மாநகரசபை உட்பட்ட பல பிரதேச
சபைகளின் உறுப்பினர்கள் மீண்டும் ஐ.தே.கவில் இணைந்து கொள்ளவுள்ளனர்.
இதுவரை ஆளுந்தரப்புக்கு ஆதரவு வழங்கிய
மாத்தளை மாநகர சபை உறுப்பினர் ரொசான் சில்வா தான் வெகுசீக்கிரம் மீண்டும்
ஐ.தே.கவுடன் இணையப் போவதாக இன்று தெரிவித்தார்.
அத்துடன், தம்புள்ளை, பல்லேபொல, ரத்தொட,
நாவுல பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலர் மீண்டும் இவ்வாறு ஐ.தே.கவுடன்
இணைந்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


0 Comments