Subscribe Us

(படங்கள் இணைப்பு) சர்வதேச பிறை அடிப்படையில் இன்று இலங்கையில் சில பிரதேசங்களில் ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

உலக முஸ்லிம்களின் இரண்டு பெருநாள் தினங்களில் தியாகத்தை வலியுறுத்தும் பெருநாளான புனித ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளை இன்று உலக முஸ்லிம்கள் கொண்டாடிவருகின்றனர்.

இலங்கையில் சர்வதேச பிறை அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை மற்றும் குத்பாப் பிரசங்கம் என்பன 04-10-2014 இன்று சனிக்கிழமை கொழும்பு மூர்ஸ் மைதானம், கேம்பல் பார்க், தெகிவளை, பேருவளை, கல்முனை காத்தான்குடி, புத்தளம் ஆகிய பிரதேசங்களில் வாழும் சில முஸ்லிம் சகோதரர்கள் இன்று ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாடுகின்றனர்.

இதற்கமைவாக காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா ஏற்பாடு செய்த ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை இன்று சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை முன்றலில் நடைபெற்றது.

இதில் பெருநாள் தொழுகையையும் குத்பாப் பிரசங்கத்தையும் மௌலவி அஷ்ஷெய்க் அஸ்பர்(பலாஹி) நிகழ்த்தினார்.

இதில் ஆண் பெண் அடங்கலாக சுமார் 1500க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. ரவூப் தெரிவித்தார்.

சர்வதேசப் பிறை அடிப்படையில் தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாளை இலங்கை நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Thanks; Madawalanews.com

காத்தான்குடி



கொழும்பு மூர்ஸ் மைதான தொழுகை நிகழ்வுகள்.


புத்தளத்தில்..



Post a Comment

0 Comments