கொலம்பியாவை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர், கடுமையான வயிற்று வலிக்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவரது உடலை பரிசோதித்த வைத்தியர்கள் அவரது பிறப்புறுப்பில் உருளைகிழங்கு முளைவிட்டு வளர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
பெண்ணின் அந்தரங்க உறுப்பினுள் உருளைகிழங்கு துண்டு ஒன்று வேர்விட்டு வளர்ந்திருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். பெயர் வெளியிட விருப்பமில்லாத அந்த பெணிடம் மருத்துவர்கள் எப்படி உருளைகிழங்கு அங்கு சென்றது என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், தனது தாய், குழந்தை பிறப்பை தவிர்ப்பதற்காக சிறந்த மருத்து உருளை கிழங்கு தான்.
எனவே இனச்சேர்க்கைக்கு முன் அந்த இடத்தில் உருளைக் கிழங்கை வைத்துக் கொண்டால், குழந்தை பிறப்பை தடுப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். உள்ளுருப்பினுள், உருளைக் கிழங்கு லேசாக வளர்ந்திருந்ததால், அறுவை சிகிச்சை இல்லாமல் நீக்கப்பட்டது.
இச்சம்பவம் கொலம்பியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியாவில் கடந்த 1990 முதல் பாடசாலையிலேயே உடலுறவு கல்வி கற்பிக்கப்பட்டு வந்தாலும், அங்கு வழக்கமான கருத்தடை மற்றும் பாதுகாப்பிற்கான ஆணுறை போன்றவை உபயோகப்படுத்தப்படுவதில்லை.
மாறாக, தம் மூதாதையர்கள் வாய்வழியாக கூறிவந்த இது போன்ற வைத்தியங்கள் மேலோங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுக்கு கொலம்பியாவில், பின் இளைய தலைமுறையினரிடம் பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
0 Comments