வீட்டில் தனித்திருந்த போது தனது பாட்டனார் தம்மை கொடூரமாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக நீதிமன்றத்தில் பொய் கூறி நீதிமன்றத்தை அவமதித்தது தொடர்பில் சிறுமிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் படி காலி உயர் நீதி ன்றம் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட் டார்.
அதுவரை சிறுமியை இரண்டு இலட்ச ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். 15 வயதான சிறுமியே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவராவார்.
யக்கல்முல்ல பொலிஸ் பிரதேசத்தில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அப்போது 10 வயதாகவிருந்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக அவரின் பாட்டனாரான 59 வயது நபருக்கு எதிராக இவ்வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி சமதரி பியசேன இது தொடர்பாக சாட்சியை ஆழமாக விசாரணை செய்ததாகவும் சாட்சி தம்மை பாட்டனார் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தவில்லை என்றும் பொலிஸாரிடமும் டாக்டரிடமும் பொய் கூறியதாக கூறியதாகவும் நீதிமன்றத்தில் தெரி வித்தார்.
இதையடுத்தே நீதியரசர் மேற்கண்ட வாறு உத்தரவிட்டார்.
/JAH

0 Comments