1803 : லூசியானா மாநிலத்தை பிரான்ஸிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துக்கு ஐக்கிய அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.
1827 : ஒட்டோமான், எகிப்தியப் படைகள் பிரித்தானிய, பிரெஞ்சு, ரஷ்யக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.
1941 கிறகுஜேவாச் படுகொலைகள்: சேர்பியாவின் கிறகுஜேவாச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நாசி ஜேர்மனியர்களினால் கொல்லப்பட்டனர்.
1944 இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் யூகோஸ்லாவியத் தலைநகர் பெல்கிரேட்டை ஜேர்மனியிடமிருந்து மீட்டது.
1944 : அமெரிக்காவின் கிளீவ்லன்ட் நகரில் இயற்கை வாயுக் குழாய் வெடிப்பினால் 130 பெர் கொல்லப்பட்டனர்.
1947: அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டது.
1952 : பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டிருந்த கென்யாவில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர். பின்னாளில் ஜனாதிபதியாகத் தெரிவான ஜோமோ கென்யாட்டாவும் இவர்களில் ஒருவராவார்.
1961: நீர்மூழ்கியிலிருந்து கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோவியத் யூனியன் முதல் தடவையாக பரிசோதித்தது.
1962 : இந்தியாவின் எல்லைப்பகுதியில் சீன தாக்குதல்களை ஆரம்பித்தது. இது இந்திய -சீன யுத்தத்துக்கு வழிவகுத்தது.
1976 : அமெரிக்காவின் மிசிசிப்பி ஆற்றில் பயணிகள் கப்பல் ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் 78 பயணிகள் கொல்லப்பட்டனர். 18 பேர் மட்டும் தப்பினர்.
1982 : இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
1982 : மொஸ்கோவில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 66 பேர் இறந்தனர்.
1991 : இந்தியாவின் உத்ரகாசியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 1000 பேர் உயிரிழந்தனர்.
2001 : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கூட்டணிக் கட்சி தொடங்கப்பட்டது.
2011 : லிபியாவில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட கேர்ணல் முஅம்மர் கடாபி கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.


0 Comments