சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் வல்லூறு ஒன்றை 315,000 சவூதி றியால்களுக்கு (சுமார் ஒரு கோடியே 9.5 லட்சம் இலங்கை ரூபா) விலைக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார்.
வல்லூறுகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவராக அறியப்பட்ட சாத் அல் ஷலீக்கி என்பவரே இவ்வளவு பெருந்தொகைக்கு இப்பறவையை வாங்கினார் என சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.
வல்லூறு வர்த்தகத்தில் ஈடுபடும் உள்ளூரைச் சேர்ந்த இருவரால் இப்பறவை பிடிக்கப்பட்டு சில மணித்தியாலங்களில் அதை சாட் அல் ஷலீக்கி 315,000 றியால்களுக்கு வாங்கினார் எனவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

0 Comments