1091 : லண்டனில் கடும் சூறாவளி தாக்கியது.
1346 : இங்கிலாந்தின் மூன்றாம் எட்வேர்ட் மன்னர், ஸ்கொட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் லண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தார்.
1448 : கொசோவோவில் ஹங்கேரிய இராணுவம் ஒட்டோமான் படைகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.
1610 : பதின்மூன்றாம் லூயி பிரான்ஸின் மன்னனாக முடி சூடினான்.
1660 : இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.
1662 : இங்கிலாந்தின் இரண்டாம் சார்ல்ஸ் டன்கேர்க் நகரை 40,000 பவுணிற்கு பிரான்ஸுக்கு விற்றான்.
1800 : டச்சு குடியேற்ற நாடான குரக்காவோ இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் வந்தது.
1805 : ஊல்ம் நகரில் இடம்பெற்ற சமரில் ஆஸ்திரியப் படையினர் பிரான்ஸின் நெப்போலியன் போனபார்ட்டின் படைகளிடம் வீழ்ந்தன.
1806 : ஹெய்ட்டியின் மன்னன் முதலாம் ஜாக் படுகொலை செய்யப்பட்டான்.
1907 : அட்லாண்டிக் நகரங்களுக்கிடையேயான தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவின் நோவா ஸ்கோசியாவுக்கும், அயர்லாந்துக்கும் இடையே மார்க்கோனி ஏற்படுத்தினார்.
1912 : முதலாம் பால்க்கன் போர்: பல்கேரியா, கிரேக்கம், சேர்பியா ஆகியன ஒட்டோமான் பேரரசுடன் போரை அறிவித்தன.
1917 : முதலாம் உலகப் போரில் ஜேர்மனி பிரித்தானியா மீதான தனது முதலாவது குண்டுத் தாக்குதலை நிகழ்த்தியது.
1933 : பௌதீகவியல் விஞ்ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்டைன், நாஸி ஜேர்மனியில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார்.
1941 : இரண்டாம் உலகப் போரில் முதற் தடவையாக ஜேர்மனிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது.
1956 : உலகின் முதலாவது வர்த்தக அணுமின் நிலையம் இங்கிலாந்தில் திறக்கப்பட்டது.
1961 : பாரிஸ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அல்ஜீரியர்கள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1965 : 1964 நியூயோர்க் உலகக் கண்காட்சி இரண்டாண்டுகளின் பின்னர் முடிவுற்றது. மொத்தமாக 51 மில்லியன் மக்கள் இக்கண்காட்சியைக் கண்டு களித்தனர்.
1966 : நியூயோர்க்கில் கட்டடம் ஒன்றில் இடம்பெற்ற தீயில் 12 தீயணைப்புப் படையினர் சிக்கி இறந்தனர்.
1973 : சிரியாவுக்கு எதிரான யுத்தத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் மேற்கு நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதிக்கு ஒபெக் அமைப்பு தடை விதித்தது.
1979 : அன்னை தெரேசாவுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1995 : யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்ற இலங்கை இராணுவம் ரிவிரெச நடவடிக்கையை ஆரம்பித்தது.
1998 : நைஜீரியாவில் பெற்றோலியக் குழாய் வெடித்ததில் 1200 கிராமத்தவர்கள் கொல்லப்பட்ட்னர்.
2003 : "தாய்ப்பே 101" உலகின் மிக உயரமான கட்டடமாகியது.
2006 : ஐக்கிய அமெரிக்காவின் மக்கள் தொகை 300 மில்லியனை எட்டியது.

0 Comments