(அஸ்ரப் ஏ சமத்)
ஊவாவில் 4 தமிழர்கள் மாகாணசபை உறுப்பிணர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை முஸ்லீம்கள் அரசியல் அதிகாரம் அற்று கடந்த 30 வருடகாலமாக பின்தங்கிய
நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட ஜ.தே.கட்சி 8 உறுப்பிணர்கள், மற்றும்
ஜக்கிய மக்கள் சுதந்திர முன்ணனியில் 9உறுப்பிணர்களுள் 4 மலையகத் தமிழர்கள்
மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஜ.தே.கட்சியில் போட்டியிட்ட 2
முஸ்லீம்களும் தெரிவாகவில்லை.
வெற்றிலைச் சின்னம் இ.தொ.காங்கிரஸ் செந்தில் தொண்டமான் 31,858 வெற்றிலைச் சின்னம் இ.தொ.காங்கிரஸ் கணேச முர்த்தி 19,262
ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி வெற்றிலைச் சின்னம் வடிவேல் சுரேஸ் 21,967 விருப்பு வாக்குகள் முலம் தெரிவாகியுள்ளனர்.
ஜ.தே.கட்சி சார்பில் வேலாயுதன் ருதீபன் மட்டும் 30,457 வாக்குகளைப் பெற்று மேற்படி 4 பேர் தெரிவாகியுள்ளார்.
மலையக மக்கள் முன்னணி திருமதி சந்திரசேகரனின் வேட்பாளர் அரவிந்தக் குமார்
கடந்த இரு முறை தணியாக தேர்தலில் குதித்து இரு முறை வெற்றி பெற்றவர்.
இம்முறை வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டார் விருப்புவாக்குகள்
குறைவாகப் பெற்றதால் அவர் தெரிவாகவில்லை. அத்துடன் பிரதியமைச்சர்
திகாம்பரத்தின் உறுப்பிணர் எஸ். இராஜமாணிக்கமும் தெரிவாகவில்லை. அத்துடன்
இ.தொ.காங்கிரஸ் 3 உறுப்பிணர்களை நிறுத்தியது அதில் சிவலிங்கமும் மட்டும்
தெரிவாகவில்லை.
முஸ்லீம் உறுப்புரிமை
ஜ.தே.கட்சி சார்பில் போட்டியிட்ட அமீர் மொஹமட் மற்றும் ஒரு முஸ்லீம்
உறுப்பணர்கள் கடந்தமுறை போன்று இம்முறையும் குறைந்த விருப்பு வாக்குகளால்
தெரிவாகவில்லை. ஆனால் பதுளையில் உள்ள 40ஆயிரம் முஸ்லீம் வாக்குகள் எங்கே
போனது ?. முஸ்லீம்கள் வாக்களிக்கச் செல்லவில்லையா ? ஜக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி இம்முறை முஸ்லீம்களை வேட்பாளர்களாக நிறுத்த வில்லை.
இரட்டை இலைக்கு 5200 வாக்குகள் மட்டுமே கிடைக்கப்பெற்றன. இவ் வாக்குகள் போக
மிகுதி 34ஆயிரம் வாக்குகள் ஜ.தே.கட்சிக்கு முஸ்லீம்கள் போட்டியிருக்க
வேண்டும் அதில் போட்டியிட்ட இரண்டு முஸ்லீம்களுக்கும் தெரிவாகியிருக்க
வேண்டும் . ஜ.தே.கட்சியில் 8வதாக விருப்பு வாக்குகளைப் பெற்றவர்
பெரும்பாண்மையினத்தவர் 20,249 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இந்த 34ஆயிரம் வாக்குகளில் இரட்டை இலைக்கு ஆகக்குறைந்தது 15ஆயிரம்
வாக்குகளை பதுளை முஸ்லீம்கள் போட்டிருந்தால் முஸ்லீம் ஒருவர் தெரிபு
செய்யப்பட்டிருப்பார். ஜே.வி.பி 15,500 வாக்குகளையே பெற்று ஒரு உறுப்பிணரை
பெற்றுள்ளது.
கடந்த ஊவா மாகணசபைத் தேர்தலில் பதுளையில் முஸ்லீம் காங்கிரஸ் தணியாகப்
போட்டியிட்டு 4500 வாக்குகளையே பெற்றிருந்தன. ஊவாவின் வரலாற்றில் மறைந்த
எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் காலத்தில் மட்டுமே 1987;களில் பதுளையைச்
சேர்ந்த ஜனாப் சித்திக் என்பவர் மாகாணசபை உறுப்பிணராக முஸ்லீம்
காங்கிரசில் ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது மறைத தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள் காலம்சென்ற ஓசி
அபேகுணசேகர, சானக்க அமரதுங்க ஆகியவர்களது சிங்கள கட்சியை இணைத்து
போட்டியிட்டார். இத் தேர்தல் காலத்தில் ஜே.வி.பி, ஸ்ரீ.ல.சு கட்சி
மாகாணசபைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போட்டியிடவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது. வட கிழக்குக்கு வெளியே உள்ள மாகாணசபையில் முஸ்லீம்
காங்கிரஸ் 17 உறுப்பிணர்கள் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின் கடந்த 27 வருடகாலமாக ஊவா மாகாணத்துக்கு இதுவரை ஒரு முஸ்லீம்
மாகாணசபை உறுப்பிணரும் தெரிவாக இல்லை. இதனால் ஊவா வாழ் முஸ்லீம் மக்கள்
அரசியல் அநாதைகளாகவும் மிகவும் பின்தங்கிய நிலையில் தமக்கென கிடைக்கும்
அரசியல் அபிவிருத்திகளைக் கூட பெறமுடியாமல் உள்ளனர். அடிப்படை வசதிகள்
அற்று பாதை, நீர், மற்றும் முஸ்லீம் பாடசாலைகளில் எவ்வித பௌதீக வசதிகள்
இன்றி கல்வியில் பெரிதும் பின்தங்கிய சமுகமாக இருந்து வருகின்றனர்.


0 Comments