(அஷ் ரப் ஏ சமத்)
இன்றைய தேசிய சிங்கள ஞயிறு பத்திரிகையில் முன்பக்க தலைப்புச் செய்தியில் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் அரசாங்கத்தின் சட்டத்தை மீறி வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் கையெழுத்திட்டு அவரது லெட்டர் பேட்டில் சவுதிஆரேபியா மன்னருக்கு எழுதிய கடிதம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு முஸ்லிம்களை மீளக் குடியேற்றுவதற்கு தணிப்பட்ட முறையில் பணம் பெற்றுள்ளார் என அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள்து. இவர் அரசாங்கத்தின் அமைச்சர் அரசாங்க நிதியமைச்சின் ஊடகா பணம் பெறாது தனிப்பட்ட முறையில் வெளிநாடுகளில் எவ்வாறு பணம் பெறமுடியும் என அந்தச் செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.

0 Comments