Subscribe Us

header ads

அரங்கினுள் சோபாக்களுடன் வந்து உலக கிண்ண கால்பந்து போட்டிகளை ரசிக்கும் ஜேர்மனி ரசிகர்கள்

பிரேஸிலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக கிண்ண கால்பந்து போட்டிகளை ரசிக்க ஆயிரக்க கணக்கான ஜேர்மனியின் கால்பந்து ரசிகர்கள் பேர்லின் அரங்கிற்கு சோபாக்களுடன் வருகை தருகின்றனர்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கால்பந்து போட்டியின் நேரலையினை உலக கிண்ண முதல் போட்டியில் இருந்து பேர்லின் அரங்கில் பெரிய திரையில் காண்பிக்கப்படுகிறது. இங்கு வரும் ரசிகர்கள் தமது வீட்டில் அமர்ந்து பார்ப்பது போன்று சோபாக்களுடன் வருகை தர அரங்க நிர்வாகம் அனுமதித்துள்ளது.


இதனால் ஒவ்வொரு போட்டியையும் காண பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் சோபாக்களுடன் ஒன்று கூடுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரேஸிலுக்கும் குரோசியாவுக்கு இடையிலான போட்டியினை காண இவ்வரங்கில் சுமார் 12 ஆயிரம் பேர் ஒன்று திரண்டுள்ளனராம்.

'இது எனது வீடு எனது வசிப்பறை போன்று இருந்தது என்ற ரசிகர்களின் பாடலே இந்த உலக கிண்ண வசிப்பறை எனும் அரங்கினுள் திரை என்ற சிந்தனை தோன்றக் காரணம்' எனகிறார் இத்திட்டத்தை ஒழுங்கு செய்த ஜெரால்ட் போன்ஸ்கி.




Post a Comment

0 Comments