200 ஆபாச் படங்களைத் தயாரிப்பதற்கு பிரான்ஸ் நாட்டவரொருவருக்கு சிறுவர்களை வழங்கி இலட்சக் கணக்கில் பணம் பெற்றதாகக் கூறப்படும் வெளிநாட்டவருக்கு வழி காட்டியாக தொழில் புரியும் நபரொருவரை நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விசேட பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்த நபரின் வீட்டை வாடகைக்குப் பெற்று பிரான்ஸ் நாட்டவர் அந்த வீட்டில் சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளதாகவும் சிறுவர்களைப் பயன்படுத்தி ஆபாச திரைப்படங்களைத் தயாரித்து வந்துள்ளதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட இந்த நபரின் வீட்டை வாடகைக்குப் பெற்று பிரான்ஸ் நாட்டவர் அந்த வீட்டில் சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளதாகவும் சிறுவர்களைப் பயன்படுத்தி ஆபாச திரைப்படங்களைத் தயாரித்து வந்துள்ளதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட ஆறு சிறுவர்கள் தொடர்பான
தகவல்கல்களையும் பெற்றுக் கொண்டு மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் இந்த வழிகாட்டியைக் கைது செய்துள்ளனர்.
2002 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுவரை இந்த பிரான்ஸ் நாட்டவர் அவ்வப்போது இலங்கைக்கு வந்து ஹிக்கடுவ, நீர்க்கொழும்பு, சீகிரிய மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களிலுள்ள ஹோட்டல்களில் தங்கியிருந்து சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதுடன் அவர்களை வைத்து ஆபாச இறுவட்டுகளைத் தயாரித்து வந்துள்ளதாகவும் அதிகார சபை தெரிவிக்கின்றது.
இது போன்ற 200 ஆபாச இறுவட்டுகளைத் தயாரித்து இந்த நபர் தனது நாட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்த பிரான்ஸ் நாட்டவர் அந் நாட்டு பொலிஸாரால் ஆபாச இறுவட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் அதிகாரிகள் அங்குள்ள இலங்கை தூதரகத்தின் மூலம் இந்த பிரான்ஸ் நாட்டவர் குறித்த தகவல்களையும் அவர் ஆபாச இறுவட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்திக்கொண்ட இறுபது சிறுவர்களது படங்களையும் நீதி அமைச்சருக்கு அனுப்பியுள்ளது.
இதையடுத்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் இது தொடர்பாக
விசாரணை நடத்தி குறித்த வழிகாட்டியை கைது செய்துள்ளனர்.
✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Follow Us in Groups: https://www.facebook.com/groups/kalpitiyavoice


0 Comments