இலங்கை – இந்தியாவுக்கிடையிலான உறவை வலுப்படுத்திக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தை நரேந்திர மோடி தனது ருவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இலங்கை வருமாறு மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 Comments