Subscribe Us

ஊழல் நிறைந்த இந்திய அரசாங்கத்தை அந்நாட்டு மக்கள் ஆட்சியில் இருந்து அகற்றியது போல் இலங்கை மக்களும்..

இலங்கை மக்கள் இந்திய மக்களிடம் இருந்து உதாரணத்தை கற்றுக்கொள்ள
ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கிய இந்திய அரசாங்கத்தை அந்நாட்டு மக்கள் ஆட்சியில் இருந்து அகற்றியுள்ளனர்.
வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இதுபோல் இலங்கை மக்களுக்கும் ஊழல் மோசடி மிக்க நாட்டை சுரண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை தோற்டிக்க இந்திய மக்களை பின்பற்றி நாட்டை காப்பற்ற வேண்டும்.
இந்திய மக்கள் ஊழல் மற்றும் நிருவாக திறமையற்ற அரசாங்கத்தை நிராகரித்து ஒரு புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தன் மூலம் ஒரு பொறுப்பான முடிவை எடுத்துள்ளனர்.
10 வருடங்களாக  நாட்டை ஆட்சி செய்த ஊழல் மிக்க அரசாங்கத்தை இந்திய மக்கள் எடுத்து முடிவு பாராட்டத்தக்கது.
நல்லாட்சி மற்றும் அனைவரும் நீதியை ஏற்படுத்த நாட்டை ஊழலில் இருந்து பாதுகாக்க, நாட்டு மக்கள் பொறுப்பான மற்றும் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவது பற்றி தான் இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் பொன்சேகா  தெரிவித்தார்.

Post a Comment

1 Comments