Subscribe Us

header ads

உரிய பதிலின்றேல் புதிய அரசியல் யுகத்தினை நோக்கி பயணிக்கவேண்டி ஏற்படும் : விமல்

ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பு வெற்­றி­க­ர­மாக முடி­வ­டைந்த போதிலும் இரண்டாம் கட்ட பேச்­சு­வார்த்­தையின் போதும் எமது கட்­சியின் 12 கோரிக்­கை­களை நிறை­வேற்றக் கோருவோம். அதற்கும் அரசு உரிய பதி­ல­ளிக்­கா­விடின் புதிய அர­சியல் யுகத்­தினை நோக்கி பய­ணிக்க வேண்­டிய நிலை ஏற்­படும் என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.

இதே­வேளை, இலங்கை மீதான அர­சியல் ரீதி­யான நட­வ­டிக்­கையில் அமெ­ரிக்கா எது­வித மாற்­றத்­தையும் ஏற்­ப­டுத்தப் போவ­தில்லை. தொடர்ந்தும் அர­சுக்கு அழுத்தம் கொடுக்கும். அத்­தோடு, சர்­வ­தேசப் பிர­தி­நி­திகள் எமது நாட்­டுக்கு வருகை தந்து கூட்­ட­மைப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்தி இனங்­க­ளுக்­கி­டையே பிரி­வு­களை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­க­ளுக்கு உதவ முனை­யக்­கூ­டாது என்றும் அவர் கோரினார்.
இது தொடர்­பாக அறி­வு­றுத்தும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று இடம்­பெற்­ற­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்­பாக அவர் மேலும் அங்கு கருத்துத் தெரி­விக்­கையில்,
கொழும்பில் கடந்த 5 ஆம் திகதி இடம்­பெற்ற தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் 2 ஆவது மாநாட்­டின்­போது அர­சிற்கு ஆலோ­சனை விடுக்கும் வகையில் 12 தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன. தற்­போது நாடு முகங்­கொ­டுத்­துள்ள சமூக, பொரு­ளா­தார, அர­சியல் நெருக்­கடி தொடர்பில் எதிர்­கா­லத்தில் அனைத்து இனத்­த­வர்­களும் ஒன்­றி­ணைந்து பய­ணிக்கும் வித­மான பொதுப் பய­ணத்­திற்­கான தீர்­மா­னங்­க­ளையே நிறை­வேற்­றி­யுள்ளோம். நாட்டில் மதங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. எமது 12 தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­வ­த­னூ­டாக நாட்டை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும்.
எனவே, இது தொடர்­பாக சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சிரேஷ்ட தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். குறித்த பேச்­சு­வார்த்தை வெற்­றி­க­ர­மாக முடிவு பெற்­றது. இது தொடர்­பாக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ வாக்­கு­று­தி­ய­ளித்தார். இருப்­பினும் உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் அனைத்தும் கிடைக்கப் பெறு­வ­தில்லை.
ஆகையால் இத்­த­கைய கார­ணங்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தை நடத்­த­வுள்ளோம். அதன்­போது எமது தீர்­மா­னங்­க­ளையே முன்­வைப்போம். அதன் பின்பும் அரசு எமது கோரிக்­கை­களை நிறை­வேற்ற தவறின் புதிய அர­சியல் யுகத்தை நோக்கிப் பய­ணிக்க வேண்­டிய நிலை ஏற்­படும். எமது கோரிக்­கை­களை அரசு நிறை­வேற்ற மறுத்தால் நாட்டை பிள­வு­ப­டுத்தும் நோக்­குடன் செயற்­படும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் செயற்­பா­டுகள் மேலோங்­கி­விடும்.
வட மாகாண முதல்வர் சி.வி. விக்­கி­னேஸ்வரன் உள்­ளிட்ட கூட்­ட­மைப்­பினர் உள்­நாட்டில் பிரச்­சி­னை­களைத் தீர்க்­காமல் சர்­வ­தே­சத்தை நாடு­வ­தனால் இலங்கை சர்­வ­
தேச நாடு­களின் விளை­யாட்டு மைதா­ன­மா­கி­விடும். இந்­நி­லையில் இலங்கை மீதான அர­சியல் ரீதி­யான நட­வ­டிக்­கையில் மாற்றம் ஏற்­பட போவ­தில்லை. அமெ­ரிக்­காவின் அழுத்தம் தொடர்ந்த வண்­ணமே இருக்கும்.
இந்­நி­லையில் இந்­நாட்டின் பிரச்­சி­னை­களைத் தீர்க்கும் நோக்­குடன் வருகைதரும் தென்னாபிரிக்காவின் பிரதிநிதிகள் உள்ளி
ட்ட சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடி நாட்டில் இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கின்றனர். எனவே, அத்தகைய பேச்
சுவார்த்தைகளுக்கு அரசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து நாட்டை பிளவுபடுத்த முனையக்கூடாது என்றார்.

Post a Comment

0 Comments