சிங்கள இனம் சிறுபான்மை இனமாக மாறும் என்பதில் சந்தேகம் இ;ல்லை என பொதுபல
சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிய குடும்பம் பொன்னானது என்ற கொள்கை காரணமாக பல சிங்களப் பெண்கள்
குடும்பக்கட்டுபாடு செய்து கொண்டனர். முஸ்லிம்க்ள பல்வேறு வழிகளின்
சிங்களப் பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்கின்றனர். இதன் காரணமாக
எதிர்காலத்தில் சிங்களப்பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனமாக மாற்றமடையும்.
கொழும்பு, கண்டி, மாத்தளை போன்ற நகரங்களின் முக்கிய வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களாக முஸ்லிம்கள் திகழ்கின்றனர்.
அதுமட்டுமன்றி சிங்கள மக்களின் கிராமங்களையும் முஸ்லிம் மக்கள் கைப்பற்றி
வருகின்றனர். முட்டாள் சிங்கள மக்கள் தங்களது வீடுகளை முஸ்லிம்களுக்கு
விற்பனை செய்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

0 Comments