Subscribe Us

header ads

சனத்– சங்கா, மஹேல கருத்து முரண்பாடு முடிவு சனத்– சங்கா, மஹேல கருத்து முரண்பாடு முடிவு

இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்­வுக்­குழுத் தலைவர் சனத் ஜெய­சூ­ரி­ய­வுக்கு அணியின் சிரேஷ்ட வீரர்­க­ளான குமார் சங்­கக்­கார மற்றும் மஹேல ஜெய­வர்­தன ஆகி­யோ­ருக்கு இடையில் ஏற்­பட்­டி­ருந்த கருத்து முரண்­பாடு முடி­வுக்கு வந்­துள்­ளது.
 
 சர்­வ­தேச இரு­பது-–20 போட்­டி­க­ளி­லி­ருந்து மேற்­படி இரு­வ­ரது ஓய்வு குறித்து ஏற்­பட்ட கருத்து முரண்­பாடே சுமூ­க­மான முடி­வுக்கு வந்­துள்­ள­தாக ஜெயசூரிய நேற்று தெரி­வித்தார்.
 
 
ஐ.சி.சி.யின் 5 ஆவது உலக இரு­பது-20 கிண்ணத் தொடர் பங்­க­ளா­தேஷில் நடை­பெற்று வரு­கின்­றது. இத்­தொடர் ஆரம்­ப­மா­வ­தற்கு முன்னர் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்­க­ளான குமார் சங்­கக்­கா­ரவும் அதனைத் தொடர்ந்து மஹேல ஜெய­வர்­த­னவும் இத்­தொ­ட­ருடன் சர்­வ­தேச இரு­பது-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற ப்­போ­வ­தாக உத்­தி­யோக பூர்­வ­ மற்ற அறி­விப்பை விடுத்திருந்­தனர்.
 
அத்­துடன் இது எமது இறுதி உலக இரு­பது-20 தொடர் என வாசகம் எழு­தப்­பட்ட இரு­வரும் இணைந்து எடுத்த புகைப்­ப­டமும் ஐ.சி.சி.யின் உத்­தி­யோக பூர்வ டுவிட்டர் இணையத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.
 
இத­னி­டையே மேற்­படி இரு வீரர்­க­ளது அறி­விப்பு குறித்து அணி யின் தேர்­வுக்­குழு தலைவர் சனத் ஜெய­சூ­ரிய அதி­ருப்பி தெரி­வித்­தி­ருந்தார். ஓய்வை அறி­விக்கும் முன்னர் தேர்­வுக்­கு­ழு­வுடன் அவ ர்கள் அது குறித்து பேசி­யி­ருக்க வேண்டும் எனவும் அவர் கூறி­யி­ருந்தார். இதனால் மூவ­ருக்­கு­மி­டையே கருத்து முரண்­பாடு ஏற்­பட்­டி­ருந்­தது.
 
இந்­நி­லை­யி­லேயே சங்கக்­கார மற்றும் ஜெய­வர்­த்­தன ஆகி­யோரின் இரு­பது-–20 போட்டி ஓய்வு குறித்து ஏற்­பட்­டி­ருந்த கருத்து முரண்­பாடு முடி­வுக்கு வந்­துள்­ள­தாக சனத் ஜெய­சூ­ரிய தெரி­வித்­துள்ளார்.
 
இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,
 
சரி­யான முறையில் கருத்து பரி­மாற்றம் நடை பெறா­மையே இந்த பிரச்­சி­னைக்கு காரணம் இ நானும் சங்­க­க்கார, மஹேல ஜெய­வர்த்­தன ஆகி­யோரும் பேசி இந்த பிரச்­சி­னையை முடி­வுக்கு கொண்­டு­வந்­துள்ளோம். எங்­க­ளுக்குள் எப்­போதும் நல்ல உறவு முறை தொ டர்­கி ­றது.
 
இது­போன்ற சம்­ப­வங்கள் இனிமேல் நடை­பெ­றாது என உறுதியளிக்கிறேன். இது எனது இறுதி இருபது-–20 தொடர் என பத்திரிகை நேர்காணலில் சங்கா தெரிவித்திருந்தாரே தவிர உத்தி யோகபூர்வமாக தனது ஓய்வை அறிவிக்கவில்லை என அவர் தெரி வித்தார்.

Post a Comment

0 Comments