
இருந்த போதிலும் இன்றைய நிலையில் எமது ஊரில் பல்வேறு பட்ட துறைகளிலும் சிறந்த இளம் தலைமுறைகள் உருவாகிவரும் போதும், தற்போது எமக்கென ஒரு அரசியல் சிறந்த தலைவர் இல்லாது பின்னோக்கி செல்வதன் காரணம் என்ன? எமது ஊரில் காலத்துக்கு காலம் உருவான சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளினால் ஒவ்வொரு தடவையும் எமது கற்பிட்டி பிரதேச அபிவிருத்தி என்பது பகல் கனவு போல ஆகிவிட்டது அதிலும் குறிப்பாக சொல்லபோனால் பாடசாலையின் (கல்வி) அபிவிருத்தி, உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் வசதிகள் மிகச் சீரழிந்த நிலையிலே காணப்படுகின்றது. இதற்க்கு காரணகர்த்தாக்கள் யார்..? அரசியல் வாதிகாளா? அல்லது அங்கீகாரம் வழங்கிய பொதுமக்களா?
கற்பிடியின் கல்வி அபிவிருத்தியை பொருத்தமட்டில் முதலில் பாடசாலையின் நிலைமையினை சற்று உற்றுநோக்குவோம். தற்போது பாடசாலையின் நிலை, கல்வியின் தரம் மிக முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல போனால் உயர்தர கல்வியின் நிலை படும் மோசமான அளவுக்கு பின தள்ளப்பட்டுள்ளது. கற்பிட்டி கோட்ட கல்விப் பிரிவில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய எமது ஊரின் பிரதான பாடசாலையான அல் அக்ஸா தே பா இன்று பாலர் பாடசாலைகளை விடவும் பின் தங்கிய நிலையில் உள்ளது . எமது பாடசாலையின் நிலையினை உற்றுநோக்கும் போது எமது ஊரின் கல்வி நிலை அபிவிருத்தி பாதையில் செல்லுகின்றதா அல்லது அழிவுப்பாதையை நோக்கி இழுத்துச் செல்லுகின்றதா என்று எண்ணத்தோன்றுகின்றது. காரணம் இல்லாமல் இல்லை. இற்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன் அன்றைய சமூக தலைவர்களினால் தரமான கல்வி ஊரில் உள்ள சகல மக்களுக்கும் இலகுவாக சென்றடைய வேண்டும் என்ற பறந்த நோக்கில் உருவாக்கப்பட்ட எமது பாடசாலை இன்று (கூடிய விசக்கிருமிகளின் தங்குமிடமாக) சரியான நிருவாகிகள், அபிவிருத்தி சங்கங்கள், பழையமாணவர் அமைப்புக்கள் இல்லது காணப்படுகின்றமை எம்மை அதிர்ச்சியடைய செய்கின்றது.
உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி பற்றி சொல்லபோனால், கற்பிட்டி இலங்கையின் சுற்றுலா தளம் என பிரகடனம் செய்யபட்ட நாளில் இருந்து இன்று வரை பல அபிவிருத்தி திட்டங்கள் கற்பிட்டியை நோக்கி வந்த வண்ணம் உள்ளது அனால் கற்பிடியை நோக்கி வரும் பணிகள் அனைத்தும் இடை மறித்து சில சுயநல அரசியல் வாதிகளால் திருப்ப பட்டும் மறைக்கப்பட்டும் போகிறது. இதனை அரியாத எமது ஊர் அரசியல் அறிஞர்கள் சந்ததிகளுக்கு சநதி நின்று தமது அடுத்த கட்ட அரசியல் காய் நகர்தல் பற்றி மக்களை மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இவர்கள் என்ன தான் செய்வார்கள் தமக்கு தெரிந்ததை தானே செய்ய முடியும். எமது மக்கள் ஏமாறும் (படித்த முட்டாள்களாக) இருக்கும்வரை இவர்களும் மாறமாட்டார்கள். உடகட்டமைப்பு வசதிகள் செய்து கொடுப்பதில் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் தம்மால் முடிந்த்த வரை தமக்கு தெரிந்த விடயங்களை செய்கிறார்கள் அதற்குஅவர்கள நிச்சயமாக பாராட்ட வேண்டும்.
நன்கு திட்டமிட்டு செயற்படக்கூடிய சாணக்கியமான அரசியல் தலைமை ஒன்று இருந்திருதால் இன்று கற்பிட்டியின் நிலை புத்தளம் தொகுதியின் அரசியல், கல்வி,வணிகம், சுகாதாரம் , விளையாட்டு மற்றும் கலை காலச்சாரம் போன்ற துறைகளில் முதன்மை வகிக்ககூடிய நிலை. உருவாகி இருக்கும். எம்மை தேடி வரும் சகல அபிவிருத்திகளையும் மடக்கி எடுத்து எமது ஊரின் வளர்ச்சியை உறுதிபடுத்தி இருக்க முடியும்.
எமது ஊரின் அபிவிருத்தி சரியான தரப்பின் கையில் போய் சேருவதற்கு இன்றிலிருந்து முயற்சித்தால் நிச்சயமாக எதிர்வரும் பிரதேச சபை தேர்தலில் மாற்றம் ஒன்றை காணலாம். சிந்தித்து செயற்படுவோம் வெற்றி நிச்சயம்.
எமது ஊரின் அபிவிருத்தி சரியான தரப்பின் கையில் போய் சேருவதற்கு இன்றிலிருந்து முயற்சித்தால் நிச்சயமாக எதிர்வரும் பிரதேச சபை தேர்தலில் மாற்றம் ஒன்றை காணலாம். சிந்தித்து செயற்படுவோம் வெற்றி நிச்சயம்.
0 Comments