624: மக்காவின் குரைஷிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சவூதியின் ஹெஜாஸ் பிராந்தியத்தல் பத்ர் யுத்தம் நடைபெற்றது. இதில் முஸ்லிம்கள் வென்றமை இஸ்லாத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.1639 : அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகத்துக்கு சமயவாதி ஜோன் ஹவார்ட் என்பவரின் பெயர் சூட்டப்பட்டது.
1781 : வில்லியம் ஹேர்ச்செல் யுரேனஸ் கோளைக் கண்டுபிடித்தார்.
1811 : பிரித்தானியர் பிரெஞ்சுப் படைகளை லீசா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.
1881 : ரஷ்யாவின் சார் மன்னன் இரண்டாம் அலெக்சாண்டர் தனது மாளிகைக்கு அருகில் நடந்த குண்டு வீச்சில் கொலை செய்யப்பட்டார். (ஜூலியன் நாட்காட்டியில் இது மார்ச் 1 இல் இடம்பெற்றது).
1900 : பிரான்ஸில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வேலை நேரம் சட்டப்படி 11 மணி நேரமாகாக் குறைக்கப்பட்டது.
1908 : நெல்லை க்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் கைது செய்யப்பட்டதால் திருநெல்வேலியில் எழுச்சி ஏற்பட்டது.
1921 : மொங்கோலியா சீனாவிடம் இருந்து பிரிவதாக சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1940 :- இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உத்தம் சிங் லண்டனில் காக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் இடம்பெற்ற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் முன்னாள் ஆளுநர் மைக்கேல் டயர் என்பவரை சுட்டுக் கொன்றார்.
1943 : ஜேர்மனியப் படைகள் போலந்தின் யூதக் குடியேற்றங்களை அழித்தனர்.
1954 : வியட்நாம் போர்: வியட் மின் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தாக்கினர்.
1957 : கியூபா ஜனாதிபதி புல்ஜென்சியோ பட்டீஸ்டாவைக் கொல்ல மாணவ தீவிரவாதிகள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
1969 : அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது.
1979 : கிரெனடாவில் இடம்பெற்ற புரட்சி ஒன்றில் அதன் பிரதமர் எரிக் கெய்ரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1988: உலகின் மிக நீளமான கடலடி சுரங்கப்பாதை ஜப்பானில் திறக்கப்பட்டது.
1992 : கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற (6.8 ரிச்டர் அளவு) பூகம்பத்தில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
1997 : அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரின் மீது பீனிக்ஸ் வெளிச்சங்கள் தெரிந்தன.
2003 : இத்தாலியில் 350,000-ஆண்டு பழமையான மனித அடிச்சுவாடுகாள்
கண்டுபிடிக்கப்பட்டதாக நேச்சர் இதழ் அறிவித்தது.
2007 : 2007 உலகக் கிண்ண (கிரிக்கெட்) சுற்றுப்போட்டி மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமாகியது.
2013: பாப்பரசர் 16 ஆம் ஆசிர்வாதப்பர் ஓய்வுபெற்றதைடுத்து புதிய பாப்பரசராக
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த கர்தினால் ஜோர்ஜ் மரியோ பேர்கோக்லியோ தெரிவானார். அவர் முதலாம் பிரான்சிஸ் என்ற பெயருடன் பாப்பரசரானார்.

0 Comments